×

"முனுசாமி அங்கிள் மூலம் மூணு மாசம் கர்ப்பம்" -சிறுமியை சிதைத்த நபருக்கு நேர்ந்த கதி .

 

விளையாட வந்த ஒரு 14 வயதான பெண்ணை கரப்பமாக்கிய நபரை போலீஸ் கைது செய்தது 

தமிழகத்தின் திருவள்ளூர் அடுத்த நயப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 45 வயதான  முனுசாமி ,அதே பகுதியில்  ஒரு  கடை நடத்தி வருகிறார். அவரின் வீடும் அந்த கடையின் அருகே இருக்கிறது .அவரின் வீட்டுக்கு அருகே 9ம் வகுப்பில் படிக்கும் 14 வயதான ஒரு டீனேஜ் பெண் தன்  பெற்றோருடன் வசித்து வருகிறார் .அந்த 14 வயதான பெண் அந்த 45 வயதான முனுசாமியின் வீட்டுக்கு அடிக்கடி விளையாட செல்வது வழக்கம் .அப்போது அந்த சிறுமி அவரை, 'முனுசாமி அங்கிள்' என்று அன்புடன் அழைத்து விளையாடுவார் .
அப்போது அந்த முனுசாமி அந்த டீனேஜ் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொள்வார் .பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .இதனால் அந்த பெண் மூன்று மாதம் கர்ப்பமாகிவிட்டார் .
ஆனால் அவர் இந்த விஷயத்தை வீட்டில் சொல்லாமல் இருந்தார் . பிறகு  சில நாட்களாக மகளின் நடவடிக்கையில் மாற்றங்களை கவனித்த  அவரின் பெற்றோர் அவரிடம் விசாரித்த போது ,அந்த பெண் 'முனுசாமி அங்கிள் மூலம்  தான் மூன்று மாதம்' கர்ப்பமாகிவிட்டதை  கூறினார் .அதை கேட்ட அந்த பெற்றோர் அதிர்ச்சியில் மயக்கம் வராத குறையாக அந்த பெண்ணை அங்குள்ள ஹாஸ்ப்பிட்டலுக்கு சிகிச்சைக்கு கூட்டி சென்றனர் .அதன் பிறகு அந்த முனுசாமி மீது போலீசில் புகார் கொடுத்தனர் .போலீசார் வழக்கு பதிந்து அந்த முனுசாமியை  கைது செய்தனர் .