×

தம்மம்பட்டி அருகே சாலையோர பள்ளத்தில் ஆண் சடலம் மீட்பு , விபத்தா ? கொலையா என போலீசார் விசாரணை!

ஆத்தூர் சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே கொண்டையம் பள்ளி அரசு டாஸ்மாக் கடை அருகே சாலையோர பள்ளத்தில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் தம்மம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்,விசாரணையில் இறந்தவர் கொண்டையம் பள்ளி கிராமம் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் செந்தில் (வயது 38) என்பதும் இவர்
 

ஆத்தூர்

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே கொண்டையம் பள்ளி அரசு டாஸ்மாக் கடை அருகே சாலையோர பள்ளத்தில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் தம்மம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்,விசாரணையில் இறந்தவர் கொண்டையம் பள்ளி கிராமம் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் செந்தில் (வயது 38) என்பதும் இவர் தம்மம்பட்டியில் மெக்கானிக் வேலை செய்து வருவதாகவும் நேற்று வீட்டில் வேலைக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றவர் இன்று காலை கொண்டையம்பள்ளி அரசு டாஸ் மாக் கடை அருகே உள்ள சாலையோர பள்ளத்தில் தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளதாகவும், இவரை யாராவது மது போதையில் அடித்து கொலை செய்து வீசி சென்றார்களா இல்லை விபத்தில் இறந்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

allowfullscreen

-ஆரோக்கியராஜ்