×

” நீ எப்போதும் தூங்குறே ,நான் அதுக்காக ஏங்குறேன்” -ஓடிபோன மனைவியையே தேடிப்போன புருஷன் செஞ்ச வேலை.

குழந்தை பிறக்காத காரணத்தால் ஒரு பெண் கணவனை விட்டுவிட்டு காதலனோடு ஓடிப்போனதால் அந்த கணவன் அவரை தேடிப்போய் ஆசிட் வீசி தாக்கியுள்ளார் . மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் 25 வயதான அவினாஷ் ஆர் ராஜுரே மற்றும் சாவித்ரா டி.அங்குல்கர் – என்ற பெண்ணும் புனேவில் ஒன்றாக வசித்து வந்தனர்.இதில் அவினாஷ் ஒரு நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றினார் .பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலே கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒன்றாக கணவன் மனைவி போல வாழ்ந்து வந்தார்கள் .கடந்த
 

குழந்தை பிறக்காத காரணத்தால் ஒரு பெண் கணவனை விட்டுவிட்டு காதலனோடு ஓடிப்போனதால் அந்த கணவன் அவரை தேடிப்போய் ஆசிட் வீசி தாக்கியுள்ளார் .


மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் 25 வயதான அவினாஷ் ஆர் ராஜுரே மற்றும் சாவித்ரா டி.அங்குல்கர் – என்ற பெண்ணும் புனேவில் ஒன்றாக வசித்து வந்தனர்.இதில் அவினாஷ் ஒரு நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றினார் .பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலே கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒன்றாக கணவன் மனைவி போல வாழ்ந்து வந்தார்கள் .கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர்கள் ஒன்றாக வாழ்ந்தாலும் அந்த பெண்ணுக்கு குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை .அதனால் அவர்கள் பலமுறை முயற்ச்சி செய்தும் அந்த கணவனால் அந்த பெண்ணுக்கு குழந்தை உருவாகவில்லை .இதனால் நாளுக்கு நாள் அந்த பெண் குழந்தைக்கு ஏங்கினார் .
அதனால் அந்த பெண் தன்னுடைய பழைய காதலன் ஒருவருடன் கள்ள உறவு ஏற்படுத்திக்கொண்டு அவரோடு ஓடிவிட்டார் .கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அவருடன் அந்த பெண் போய் விட்டார் .இதனால் கடுமையான கோபத்திலிருந்து அந்த கணவன் ராஜுரே கடந்த வாரம் ஒரு நாள் அவரை தேடி போய் ஆசிட் கலந்த பெட்ரோலை அவரின் மீது ஊற்றி விட்டு வந்துவிட்டார் .இந்த ஆசிட் வீச்சில் கடுமையான காயமுற்ற அந்த பெண் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் .போலீசார் குற்றவாளியான அவரின் கணவர் ராஜூரை ஞாயிற்றுக்கிழமை நாண்டேடில் உள்ள ஒரு மறைவிடத்தில் இருந்து கைது செய்தனர்.மறுநாள், பீட் கோர்ட் நீதிபதி அவரை ஒரு வாரம் போலீஸ் காவலில் வைத்தார் .