×

பிரபல ரவுடி முருகன் கொலை வழக்கில் சிறுவன் உட்பட 8 பேர் கைது!

மதுரை கரும்பாலை பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் மீது பல கொலை மற்றும் குற்ற சம்பவங்களுக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் முருகன் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று இரு தினங்களுக்கு முன்பு அரசு மருத்துவமனைக்குள் புகுந்து அறுவை சிகிச்சை பிரிவு 101 வார்டில் இருந்த முருகனை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த தாக்குதலில்
 

மதுரை கரும்பாலை பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் மீது பல கொலை மற்றும் குற்ற சம்பவங்களுக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் முருகன் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.


இதையடுத்து ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று  இரு தினங்களுக்கு முன்பு அரசு மருத்துவமனைக்குள் புகுந்து அறுவை சிகிச்சை பிரிவு 101 வார்டில் இருந்த முருகனை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த தாக்குதலில் முருகன் சம்பவ இடத்திலேயே பலியானார்.இதுகுறித்து தகவலறிந்த  ராஜாஜி அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வந்தனர்.

இந்நிலையில் இந்த கொலை வழக்கில் கரும்பாலை பகுதியை சேர்ந்த அருண்பாண்டி, விக்கி, தவசி, ராமச்சந்திரன், சல்மான்கான் மற்றும் ஒரு சிறார் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் நடைபெற்ற நாளில் மருத்துவமனை வளாகத்தில் பணியில் இருந்த இரண்டு காவலர்கள் உட்பட 3 பேர் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.