கொலையில் முடிந்த காதல் திருமணம் -வரதட்சணை கேட்டதால் கணவன் குடும்பத்தினரை கொன்ற கொடூரம்.
காதல் திருமணம் புரிந்த ஜோடியில், கல்யாணத்திற்கு பிறகு கணவன், மனைவியிடம் வரதட்சணை கேட்டதால் கடுப்பான மனைவியின் குடும்பத்தினர் ,கணவனின் உறவினர்கள் இருவரை வெட்டி கொன்றனர்.
தமிழகத்தின் தூத்துக்குடி நகரில் உள்ள சிவகலை என்ற இடத்தில் விக்னேஷ் மற்றும் சங்கீதா ஆகியோர் காதலித்து வந்தனர்.சுமார் 12 நாட்களுக்கு முன்பு விக்னேஷ் மற்றும் சங்கீதா ஒருவருக்கொருவர் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்குப் பிறகு, இந்த ஜோடி சங்கீதாவின் வீட்டில் வசிக்கத் தொடங்கியது.இந்த நேரத்தில், விக்னேஷ் 40 சவரன் தங்க நகைகளை வரதட்சணையாக கேட்டு துன்புறுத்தியதாக சங்கீதா குடும்பத்தினர் கூறினர்.
இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து தீர விசாரித்து வருகின்றனர் .