×

மகள்களை நிர்வாணமாக்கி நரபலி கொடுத்த பெற்றோர் : பரபரப்பு வாக்குமூலம்!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி சிவநகரை சேர்ந்தவர் புருஷோத்தமன் – பத்மஜா தம்பதி. இவர்களுக்கு அலெக்கியா (27), சாய் திவ்யா (22) என்ற இருமகள்கள் உள்ளனர். அலெக்யா போபாலில் முதுகலை நிர்வாக மேலாண்மைப் படிப்பை முடித்துள்ள நிலையில், சாய் திவ்யா ஏ. ஆர்.ரஹ்மானின் மும்பை இசைப் பள்ளியிலும் படித்து வந்துள்ளார். புருஷோத்தமன் மகளிர் கல்லூரியில் துணை முதல்வராக உள்ள நிலையில், பத்மஜா தனியார் கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியையாகவும் இருந்து வந்துள்ளார். புருஷோத்தமன் – பத்மஜா
 

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி சிவநகரை சேர்ந்தவர் புருஷோத்தமன் – பத்மஜா தம்பதி. இவர்களுக்கு அலெக்கியா (27), சாய் திவ்யா (22) என்ற இருமகள்கள் உள்ளனர். அலெக்யா போபாலில் முதுகலை நிர்வாக மேலாண்மைப் படிப்பை முடித்துள்ள நிலையில், சாய் திவ்யா ஏ. ஆர்.ரஹ்மானின் மும்பை இசைப் பள்ளியிலும் படித்து வந்துள்ளார். புருஷோத்தமன் மகளிர் கல்லூரியில் துணை முதல்வராக உள்ள நிலையில், பத்மஜா தனியார் கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியையாகவும் இருந்து வந்துள்ளார். புருஷோத்தமன் – பத்மஜா தம்பதி ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருந்துள்ளனர். இதனால் கோயில், குளம் என சுற்றி திரிந்த அவர்கள், வீட்டில் அடிக்கடி பூஜைகளும் செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி புருஷோத்தமன் – பத்மஜா தம்பதி நள்ளிரவில் வீட்டில் பூஜை செய்துள்ளனர். அப்போது தங்கள் மகள்களை உடற்பயிற்சி செய்யும் கருவிகள் மூலம் அடித்து கொன்ற இந்த தம்பதி, அவர்களை நிர்வாணமாக்கி தொடர்ந்து பூஜையை செய்து வந்துள்ளனர். புருஷோத்தமன் வீட்டில் இருந்து சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுக்க, போலீசார் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர்.

அப்போது அலெக்கியா , சாய் திவ்யா இருவரும் சடலமாக கிடக்க, புருஷோத்தமன் – பத்மஜா தம்பதி மகள்களை நரபலி கொடுத்துள்ளோம்; அவர்கள் உயிர்த்தெழுந்து விடுவார்கள்; அற்புதங்கள் நிகழும் என்று பிதற்றியுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இருவரின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் புருஷோத்தமன் – பத்மஜா தம்பதி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், “மகள்களைக் கொல்ல அறிவுறுத்தினர். அதனால் இருவரையும் அடித்து கொன்றோம். 24 மணிநேரத்தில் எழுந்து விடுவார்கள்” என்று தெரிவித்துள்ளனர். அத்துடன் சாய் திவ்யா இறப்பதற்கு முன்பு ட்விட்டர் பக்கத்தில், “சிவா வந்துவிட்டார்..வேலை முடிந்தது” என பதிவிட்டுள்ளார். அத்துடன் அப்பகுதி மற்றும் வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.