×

வீட்டை விட்டு ஓடிய காதலர்கள் : காதலன் வீட்டுக்கு தீ வைத்த பெண் வீட்டார்!

காதல் திருமணம் செய்ய காதலர்கள் வீட்டை விட்டு ஓடிய நிலையில் காதலன் வீடு சூறையாடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள பெரியகுளம் கிராமத்தை சேர்ந்தவர் ரம்ய பிரபா. இவர் குமார் என்ற வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார். இதை தொடர்ந்து காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்காத நிலையில் கடந்த 30ம் தேதி காதலர்கள் இருவரும் ஊரைவிட்டு சென்று திருமணம் செய்யப் புறப்பட்டு சென்றனர். இதையறிந்த பெண்ணின் உறவினர்கள், காதலன் குமாரின் வீட்டை சூறையாடினர்.
 

காதல் திருமணம் செய்ய காதலர்கள் வீட்டை விட்டு ஓடிய நிலையில் காதலன் வீடு சூறையாடப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள பெரியகுளம் கிராமத்தை சேர்ந்தவர் ரம்ய பிரபா. இவர் குமார் என்ற வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார். இதை தொடர்ந்து காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்காத நிலையில் கடந்த 30ம் தேதி காதலர்கள் இருவரும் ஊரைவிட்டு சென்று திருமணம் செய்யப் புறப்பட்டு சென்றனர்.

இதையறிந்த பெண்ணின் உறவினர்கள், காதலன் குமாரின் வீட்டை சூறையாடினர். அத்துடன் அவரது வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கினர். இதில் 8 ஓட்டு வீடுகள் அடித்து நொறுக்கப்பட்ட நிலையில் நான்கு சக்கர வாகனங்களும் சேதமடைந்தன. அத்துடன் ஒரு குடிசை வீடும் தீ வைக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாயல்குடி போலீசார் , தப்பியோடிய 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அத்துடன் அங்கு மேலும் அசம்பாவிதம் நடக்காத வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.