×

“குழந்தை இருக்கும்போது உன்னோடு குடும்பம் நடத்த முடியாது” -விவாகரத்தானவரை கட்டிக்க நினைத்த வாலிபர் செஞ்ச வேலை.

ஒரு 10 வயதான சிறுவனின் தாயை காதலித்த வாலிபர் ,அவரை கட்டிக்க அந்த சிறுவனை கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது . தெற்கு டெல்லியில் உள்ள பாட்டி சுரங்கத்தில் 22 வயதான வாலிபர் பிட்டு என்பவர் வசித்து வந்தார் .அந்த பிட்டு தனது வீட்டின் அருகே வசித்த ஒரு பெண்ணை காதலித்தார் .ஆனால் அந்த பெண் கல்யாணமாகி 10 வயது மகனோடு கணவனை விட்டு பிரிந்து வாழ்கிறார் .இந்நிலையில் அந்த கணவனை பிரிந்து வாழும் அந்த பெண்ணை
 


ஒரு 10 வயதான சிறுவனின் தாயை காதலித்த வாலிபர் ,அவரை கட்டிக்க அந்த சிறுவனை கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது .


தெற்கு டெல்லியில் உள்ள பாட்டி சுரங்கத்தில் 22 வயதான வாலிபர் பிட்டு என்பவர் வசித்து வந்தார் .அந்த பிட்டு தனது வீட்டின் அருகே வசித்த ஒரு பெண்ணை காதலித்தார் .ஆனால் அந்த பெண் கல்யாணமாகி 10 வயது மகனோடு கணவனை விட்டு பிரிந்து வாழ்கிறார் .இந்நிலையில் அந்த கணவனை பிரிந்து வாழும் அந்த பெண்ணை பிட்டு திருமணம் செய்து கொள்ள விரும்பினார் .அதனால் அந்த பெண்ணிடம் தனனுடைய ஆசையை தெரிவித்தார் .ஆனால் அதற்கு அந்த பெண் தனக்கு 10 வயதில் மகனிருப்பதாகவும் அதனால் கல்யாணம் செய்து கொள்ள முடியாது என்று கூறிவிட்டார் .
அதனால் பிட்டுவின் கோபம் அந்த 10 வயது சிறுவனின் மீது திரும்பியது .இந்த சிறுவன் இருப்பதால் தானே தன்னை அந்த பெண் கட்டிக்க மறுக்கிறாள், அதனால் அந்த சிறுவனை கொலை செய்ய திட்டம் தீட்டினார் .
அதன் படி கடந்த நவம்பர் மாதம் 28ம் தேதி அந்த 10 வயதான சிறுவனை தன்னோடு ஐஸ் க்ரீம் சாப்பிட வருமாறு கடைக்கு கூட்டி சென்றார் .அவர் பக்கத்து வீட்டு வாலிபர் என்பதால் அந்த சிறுவன் அவரோடு சென்றார் .பிறகு அந்த சிறுவனை பிட்டு அருகில் உள்ள ஒரு காட்டுக்கு கூட்டி சென்றார் .அங்கு வைத்து அந்த சிறுவனை கழுத்தை நெரித்து கொன்றார் .பின்னர் அவரின் பிணத்தை பெட்ரோல் ஊற்றி எரித்தார் .அதன் பின்னர் அங்குள்ள குளத்தில் பாதி எரிந்த நிலையில் இருந்த அந்த சிறுவனின் பிணத்தை ஒரு பிளாஸ்டிக் பையில் அடைத்து தூக்கி வீசி விட்டார் .
அதன் பிறகு அந்த சிறுவனின் தாயார் மகனை கானாததால் போலீசில் புகார் அளித்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த போது பிட்டு அந்த சிறுவனை கொலை செய்து வீசிய விவரம் அறிந்தார்கள் .அதன் பிறகு பிட்டு மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தார்கள் .