×

"அறைக்குள்ள என்னோட அரை நிர்வாணமாக இருந்துட்டு .. -"மிரட்டிய காதலன் -கதறிய காதலி 

 


காதலியின் ஆபாச வீடியோவை ஊடகத்தில் வெளியிடுவதாக மிரட்டி அவரை கல்யாணத்திற்கு வற்புறுத்திய காதலன் கைது செய்யப்பட்டார் .


கர்நாடக மாநிலம்  தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் வித்யா நகர் பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவர் அதேப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். இவருக்கு, ஒசப்பேட்டை பகுதியை சேர்ந்த 26 வயதான கிரண்  என்பவருடன்  பேஸ்புக் மூலம் காதல் ஏற்பட்டு ,இருவரும் அடிக்கடி போனில் நேரிலும் ஜாலியாக பழகி வந்தனர் .அப்போது இருவரும் உல்லாசமாக இருந்த காட்சியை அந்த காதலன் போனில் பதிவு செய்துள்ளார் 
இந்த நிலையில் கிரண், மதுபழக்கத்திற்கு அடிமையானவர் என்பது அந்த காதலிக்கு தெரியவந்தது. இதனால் கிரணிடம் பேசுவதை இளம்பெண் தவிர்த்து வந்தார். இதற்கிடையே வாலிபர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி இளம்பெண்ணிடம் கூறியதற்கு ,அந்த பெண்  திருமணத்திற்கு  மறுத்துள்ளார். இதனால் கோபமான அந்த காதலன் அந்த பெண்ணிடம் நாம் ஜாலியாக இருந்து வீடியோவை சமூக ஊடகத்தில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார் .இதை கேட்டு பயந்த அப்பெண் சைபர் க்ரைம் போலீசில் அந்த காதலன் மீது புகார் கூறினார் .இது பற்றி போலீசார் வழக்கு பதிந்து,  இளம்பெண்ணை மிரட்டிய கிரண் இங்கலிகியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்