×

“தினம் ஒரு பொண்ணு ,கட்டு கட்டா பணத்தை எண்ணு” -விளம்பரத்தில் வீழ்ந்த தொழிலதிபர்.

ஆண் விபச்சாரராக மாற விரும்பி 15 லட்ச ரூபாயை இழந்து தவிக்கும் ஒரு தொழிலதிபரின் கதை பல சபல புத்தியுள்ளவர்களுக்கு ஒரு பாடமாக அமையும் . மும்பையில் ஒரு தொழிலதிபருக்கு இந்த ஊரடங்கு காரணமாக அவரது தொழில் முற்றிலும் முடங்கியது .இதனால் அடுத்து என்ன தொழில் செய்யலாமென்று யோசித்துக்கொண்டிருந்தவர்க்கு, திடீரென ஒரு போன் கால் வந்தது .அந்த போனில் சோனாலி என்று தன்னை அறிமுகப்படுத்துக்கொண்டு பேசிய அந்த இளம் பெண் அவரிடம், அவரின் வயது ,போட்டோ போன்றவற்றினை
 

ஆண் விபச்சாரராக மாற விரும்பி 15 லட்ச ரூபாயை இழந்து தவிக்கும் ஒரு தொழிலதிபரின் கதை பல சபல புத்தியுள்ளவர்களுக்கு ஒரு பாடமாக அமையும் .

மும்பையில் ஒரு தொழிலதிபருக்கு இந்த ஊரடங்கு காரணமாக அவரது தொழில் முற்றிலும் முடங்கியது .இதனால் அடுத்து என்ன தொழில் செய்யலாமென்று யோசித்துக்கொண்டிருந்தவர்க்கு, திடீரென ஒரு போன் கால் வந்தது .அந்த போனில் சோனாலி என்று தன்னை அறிமுகப்படுத்துக்கொண்டு பேசிய அந்த இளம் பெண் அவரிடம், அவரின் வயது ,போட்டோ போன்றவற்றினை அனுப்பி வைக்க சொன்னார் ,அதன்படி அவரும் அனுப்பினார் .அதை பார்த்த அந்த பெண் தங்களை ஆண் எஸ்கார்ட் வேலைக்கு தங்களின் டேட்டிங் வெப் சைட்டில் தேர்ந்தெடுத்துள்ளதாகவும் அதனால் தினமும் புது புது பெண்களோடு உறவுகொள்ள தயாராக இருக்கவேண்டுமென்றும் ,மேலும் இதற்கு சம்பளமாக தினமும் 20000 முதல் 25000 ரூபாய் வரை கொடுக்கப்படுமென்றும் கூறினார் .அதை உண்மையென்று நம்பிய அவர் அந்த பெண் கேட்டபடி அதற்கான லைசென்ஸ் கட்டணமாக 4லட்சம் கட்டினார் .

பிறகு அந்த சோனாலி மேலும் 4 பெண்களின் போன் நம்பரை கொடுத்து அவர்களிடம் பேசிவிட்டு அவர்கள் கூப்பிடும் இடத்திற்கு செல்லுமாறு கூறினார் .அந்த பெண்களிடம் சோனாலி கூறியபடி பேசிய அந்த நபரிடம் அந்த பெண்களும் எஸ்கார்ட் லைசென்ஸுக்கு பணம் கட்டுமாறு கேட்டதால், அவர்களிடமும் மேலும் பணம் கட்டி ,கிட்டத்தட்ட 15 லட்சம் ரூபாய் கட்டி ஏமாந்துள்ளார் .ஆனால் எந்த எஸ்கார்ட் லைசென்சும் வரவில்லை ,எந்த பெண்ணும் அவரை கூப்பிடவில்லை .அதனால் போலீசில் புக்ராளித்தார் .போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள் .