×

“தாலி ,ஜாலி அப்புறம் பணத்துடன் ஊரைவிட்டே காலி” -அடிக்கடி புடவை மாற்றுவது போல புருஷனை மாற்றி,அமித் மோடிக்கு அல்வா கொடுத்த பெண் .

ஜார்கண்டில் உள்ள ஒரு பெண் மூன்று திருமணம் செய்து கொண்டு பலரை ஏமாற்றியதால் கைது செய்யப்பட்டார் .அவர் பலரை கல்யாணம் செய்து கொண்டு கொஞ்சநாள் குடும்பம் நடத்துவார் ,அப்புறம் அவர்களிடமிருந்து நகை பணத்தினை சுருட்டிக்கொண்டு போய் விடுவார் .இப்படியே அவர் மூன்று மாப்பிளையை ஏமாற்றிய தகவல் தெரிந்துள்ளது . அவர் தனது முதல் திருமணத்தை கிரிடிஹில் ராஜ்தன்வாரில் வசிக்கும் நிலாய் குமாரை 2015 இல் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் இரண்டு ஆண்டுகள் நீடித்தது, பிறகு
 

ஜார்கண்டில் உள்ள ஒரு பெண் மூன்று திருமணம் செய்து கொண்டு பலரை ஏமாற்றியதால் கைது செய்யப்பட்டார் .அவர் பலரை கல்யாணம் செய்து கொண்டு கொஞ்சநாள் குடும்பம் நடத்துவார் ,அப்புறம் அவர்களிடமிருந்து நகை பணத்தினை சுருட்டிக்கொண்டு போய் விடுவார் .இப்படியே அவர் மூன்று மாப்பிளையை ஏமாற்றிய தகவல் தெரிந்துள்ளது .
அவர் தனது முதல் திருமணத்தை கிரிடிஹில் ராஜ்தன்வாரில் வசிக்கும் நிலாய் குமாரை 2015 இல் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் இரண்டு ஆண்டுகள் நீடித்தது, பிறகு அவரிடமிருந்து 1 கோடி ரூபாய் அபகரித்துக்கொண்டு அவரிடமிருந்து தப்பி ஓடிவிட்டார்.


பிறகு அவர் ஷாதி .காமில் தன்னை திருமணமாகாத பெண்ணென்று கூறி பதிவு செய்து, அடுத்த மாப்பிள்ளை வேட்டையை துவங்கினார் .. இந்த முறை குஜராத்தைச் சேர்ந்த ஒரு அமித் மோடி என்ற பணக்காரர் அவரின் தூண்டிலில் விழுந்து அவளை மணந்தார். பிறகு அவரை ப்ளாக் மெயில் செய்து அவரிடமிருந்து 40லட்சம் ரூபாய் பறித்துக்கொண்டு தப்பியோடி விட்டார் .
மூன்றாவதாக அவர் புனேவைச் சேர்ந்த , கலிபோர்னியாவில் குடிஇருக்கும் சுமித் தஸ்ரத் பவார் என்ற மாப்பிள்ளையை மணக்கவிருந்தார். இப்போது வெளிநாடு செல்ல ,அந்தப் பெண்ணுக்கு பாஸ்போர்ட் இல்லாததால் அதற்காக ஜார்க்கண்டிலிருந்து விண்ணப்பிக்க வேண்டியிருந்தது.

அப்போது மாப்பிள்ளை சுமித்தின் தாயார், அந்தப் பெண்ணின் தொலைபேசி எண்ணை வைத்து , அவருடன் முன்னாள் கணவர் அமித் இருக்கும் புகைப்படங்களைக் கண்டுபிடித்தபோது அந்த பெண்ணின் தில்லு முள்ளு வெளியே தெரிந்தது .பிறகு சுமித்தின் தாயார் அந்த பெண் மீது புனே போலீசில் புகாரளித்தார் .போலீசார் அந்த பெண்ணை கைது செய்து விசாரித்து வருகின்றனர் .