×

“ஒரே மதம்னு சொல்லி மத யானை மாதிரி என்னை வேட்டையாடிட்டான் ” – காதலன் மீது புகாரளித்த காதலி .

காதலியை மதம் மாற சொல்லி ,பலாத்காரம் செய்த ஒரு காதலனை போலீசார் கைது செய்தனர். மேற்கு உ.பி.யின் மொராதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 33 வயதான முர்தாசா என்றழைக்கப்டும் மிருதுஞ்சய்.இவர் பிஸ்ராக் பகுதியில் வாடகைக்கு தங்கியிருந்தார்.அந்த வீட்டினருகே வசித்த ஒரு பெண்ணை அவர் காதலித்தார் .அந்த பெண்ணும் இவரை காதலித்தார் .இருவரும் ஒரு மருந்து கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர் .அப்போது அவர் அந்த பெண்ணிடம் விரைவில் நாம் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று கூறியிருந்தார். அதை நம்பிய
 

காதலியை மதம் மாற சொல்லி ,பலாத்காரம் செய்த ஒரு காதலனை போலீசார் கைது செய்தனர்.


மேற்கு உ.பி.யின் மொராதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 33 வயதான முர்தாசா என்றழைக்கப்டும் மிருதுஞ்சய்.இவர் பிஸ்ராக் பகுதியில் வாடகைக்கு தங்கியிருந்தார்.அந்த வீட்டினருகே வசித்த ஒரு பெண்ணை அவர் காதலித்தார் .அந்த பெண்ணும் இவரை காதலித்தார் .இருவரும் ஒரு மருந்து கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர் .அப்போது அவர் அந்த பெண்ணிடம் விரைவில் நாம் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று கூறியிருந்தார். அதை நம்பிய அந்த பெண் அவரோடு பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார் .அப்போது அந்த நபர் அந்த பெண்ணுக்கு தெரியாமல் அந்த காட்சியை வீடியோ எடுத்துள்ளார் .மேலும் பல ஆண்டுகளாக சுமார் 2.50 லட்சம் ரூபாய்க்கு மேல் அவர் அந்த பெண்ணை ஏமாற்றி பணம் பறித்துள்ளார்
பிறகு அந்த பெண் அவரிடம் எப்போது நாம் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று கேட்டதற்கு ,அவர் அந்த பெண்ணை தன்னுடைய பெற்றோரிடம் கூட்டி சென்றார் .அப்போது அவர்கள் அந்த பென்ணை தங்களின் முஸ்லீம் மதத்திற்கு மாறச்சொல்லி கட்டாயப்படுத்தினர் .அதற்கு அந்த பெண் சம்மதிக்கவில்லை . அதன் பிறகு அந்த பெண் மதம் மாறவில்லையென்றால் இவரோடு இருக்கும் அந்தரங்க வீடியோவை ஊடகத்தில் வெளியிடுவதாக அவர் மிரட்டினார் .இதனால் பயந்து போன அந்த பெண் அங்குள்ள காவல் நிலையத்தில் அந்த காதலன் மீது பலாத்கார புகார் கொடுத்தார் .பொலிஸார்வழக்கு பதிந்து அந்த காதலனை கைது செய்து விசாரித்து வருகின்றனர் .