×

மனைவியின் தகாத உறவு… கண்டித்த கணவரை கழுத்தறுத்து கொன்ற மைத்துனர்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மாடாம்பூண்டி கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (23). இவர் பணி நிமித்தமாக புதுச்சேரியில் தங்கி திருபுவனை பகுதிக்கு சென்ற கொண்டிருந்த போது அப்பகுதியை சேர்ந்த காயத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒன்றரை வயது பெண் குழந்தை ஒன்று உள்ளது. இதையடுத்து தனது மாமியார் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த ராஜேஷ் குமாரின் மனைவி காயத்ரிக்கும் வேறு ஒரு நபருக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது. இதையறிந்த ராஜேஷ் குமார்
 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மாடாம்பூண்டி கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (23). இவர் பணி நிமித்தமாக புதுச்சேரியில் தங்கி திருபுவனை பகுதிக்கு சென்ற கொண்டிருந்த போது அப்பகுதியை சேர்ந்த காயத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு
ஒன்றரை வயது பெண் குழந்தை ஒன்று உள்ளது.

இதையடுத்து தனது மாமியார் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த ராஜேஷ் குமாரின் மனைவி காயத்ரிக்கும் வேறு ஒரு நபருக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது. இதையறிந்த ராஜேஷ் குமார் மனைவியிடம் சண்டை போட்டதுடன் , மனைவியிடம் இருந்து பிரிந்து முதலியார்பேட்டையிலும், திருக்கோவிலூரிலும் மாறி மாறி தங்கி பணியாற்றி வந்துள்ளார்.இதனிடையே ராஜேஷ்குமாரின் மைத்துனர் செல்வராஜ் (எ) அமல்ராஜ் ராஜேஷ்குமாரை சமாதானம் செய்து அழைத்து வந்து தனது தங்கையுடன் குடும்பம் நடத்த வைத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பைக்கில் வெளியே சென்ற ராஜேஷ்குமார் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவர் மல்லிகை நகர சவுக்குத் தோப்பு பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், ராஜேஷ் குமாரின் உடலை கைபற்றி முதற்கட்ட விசாரணையை தொடங்கினர். அதில் காயத்ரி குடும்பத்துக்கும், ராஜேஷ் குமாருக்கும் மனைவியின் கள்ளஉறவால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மைத்துனர் செல்வராஜ் மதுகுடிக்க அழைத்து சென்று திட்டமிட்டு கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதையடுத்து செல்வராஜை கைது செய்த போலீசார் ராஜேஷ்குமாரின் மனைவி காயத்ரியையும், இந்தக் கொலை சம்பவத்தில் தொடர்புடைய மேலும் இரண்டு நபர்களையும் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.