பக்கத்து வீட்டுக்காரர் சுட்டுக்கொலை; தப்பியோடிய நபருக்கு போலீஸ் வலை
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட நபர், நாட்டு துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்தார்..சங்கராபுரம் அருகியுள்ள சிறுபனைதக்கா கிராமம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் ஆறும்(40) இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இந்நிலையில் ஆறும், இன்று தனது பக்கத்துவீட்டில் வசித்து வரும் சான் என்பவரை நாட்டுத்துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினார்.
இதில் உடலில் குண்டுகள் பாய்ந்த சான், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சான் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்