×

“பொண்டாட்டிய அடிச்சதால போலீஸ் வேலை போச்சே ” -புலம்பும் ஐபிஎஸ் அதிகாரி.

ஒரு போலீஸ் உயரதிகாரி தன்னுடைய மனைவியை அடிக்கும் காட்சிகள் ஊடகத்தில் வைரலானதால் அவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுளளார் . மத்தியபிரதேச மாநிலம் போபாலில் புருஷோத்தமன் ஷர்மா என்ற ஐபிஎஸ் அதிகாரி”ஸ்பெஷல் டைரக்டர் ஜெனரல்’ ஆக பணி புரிந்து வந்தார் .அவருக்கும் அவருடைய மனைவிக்குமிடையே குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது .அவருக்கு ஒரு மகன் ,ஒரு மகள் என இரண்டு டீனேஜ் பிள்ளைகள் இருக்கின்றனர் . இந்நிலையில் கடந்த வாரம் முதல் அவர் அவருடைய மனைவியை அடிக்கும்
 

ஒரு போலீஸ் உயரதிகாரி தன்னுடைய மனைவியை அடிக்கும் காட்சிகள் ஊடகத்தில் வைரலானதால் அவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுளளார் .

மத்தியபிரதேச மாநிலம் போபாலில் புருஷோத்தமன் ஷர்மா என்ற ஐபிஎஸ் அதிகாரி”ஸ்பெஷல் டைரக்டர் ஜெனரல்’ ஆக பணி புரிந்து வந்தார் .அவருக்கும் அவருடைய மனைவிக்குமிடையே குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது .அவருக்கு ஒரு மகன் ,ஒரு மகள் என இரண்டு டீனேஜ் பிள்ளைகள் இருக்கின்றனர் .


இந்நிலையில் கடந்த வாரம் முதல் அவர் அவருடைய மனைவியை அடிக்கும் வீடியோ ஒன்று அங்குள்ள சமூக ஊடகத்தில் வைரலாகிக் கொண்டு வந்தது .இந்த வீடியோவில் அந்த ஐபிஎஸ் அதிகாரி தன்னுடைய மனைவியை அடித்து உதைக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது .
இந்த வீடியோவை பார்த்த அவரின் உயரதிகாரிகள் அந்த ஐபிஎஸ் அதிகாரியை உடனடியாக தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்கள் .இதனால் அவர் அதிர்ச்சியடைந்தார் .பிறகு இந்த வீடீயோவை பற்றி பல தகவல்கள் வந்தவண்ணமுள்ளன .அவரின் மகள் தன்னுடைய தாயார் ஓர் மனநலம் பாதிக்கப்பட்டவரென்பதால் தன்னுடைய தந்தையை அடிக்கும்படி கலாட்டாக்கள் செய்ததால், தன்னுடைய தந்தை அவரை தாக்க நேர்ந்தது என்று தந்தைக்கு ஆதரவாக க்கூறியுள்ளார் .ஆனால் ஒரு தொலைகாட்சி நிருபரும் அந்த போலீஸ் அதிகாரியின் நண்பருமான ஒருவர், அவரின் மனைவி தன்னுடைய வீட்டிற்கு வந்து போலீஸ் அதிகாரியிடம் கலாட்டா செய்தாரென்றும்,அப்போது அந்த காட்சியை படம் பிடித்து ஊடகத்தில் வெளியிட்டுள்ளதாகவும்,அவரின் மகன் தன்னுடைய தந்தை தாயாரை தாக்கும் காட்சியை வெளியிட்டதாக கூறினார் .இப்படி பல கருத்துக்கள் நிலவுவதால் போலீஸ் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.