×

`ஒன்றாக குடித்தனர்; கொலையில் முடிந்த தகராறு!’-எண்ணூரில் மீனவருக்கு நடந்த பயங்கரம்

ஒன்றாக குடித்தபோது ஏற்பட்ட தகராறில் மீனவர் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், எண்ணூரில் உள்ள காசி விசலாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் மீனவர் தமிழரசன். இவர், அதே பகுதியை சேர்ந்த அமுத நிரஞ்சன் என்பவருடன் நேற்று மது அருந்தி உள்ளார். அப்போது, இருவருக்கும் போதை தலைக்கேறியுள்ளது. இதனால், இருவரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். இந்த தகராறை பார்த்த அமுத
 

ஒன்றாக குடித்தபோது ஏற்பட்ட தகராறில் மீனவர் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், எண்ணூரில் உள்ள காசி விசலாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் மீனவர் தமிழரசன். இவர், அதே பகுதியை சேர்ந்த அமுத நிரஞ்சன் என்பவருடன் நேற்று மது அருந்தி உள்ளார். அப்போது, இருவருக்கும் போதை தலைக்கேறியுள்ளது. இதனால், இருவரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். இந்த தகராறை பார்த்த அமுத நிரஞ்சனின் உறவினர்கள், தமிழரசனை 7 இடங்களில் சரமாரியாக அரிவாளால் வெட்டி உள்ளனர்.

இது குறித்து அக்கம் பக்கத்தினர் எண்ணூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தமிழரசனை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று தமிழரசன் உயிரிழந்தார்.

இதையடுத்து, எண்ணூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அமுத நிரஞ்சன் மற்றும் அவரது உறவினர்களான சிங்காரவேலன், மைக் டைசன், அலெக்ஸ் ராஜேஷ், நெல்சன் மண்டேலா உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். படுகொலை கொல்லப்பட்ட தமிழரசன் மீது, வழிப்பறி வழக்குகள் உள்ளன. போதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் எண்ணூர் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.