×

‘நான் செல்கிறேன், குழந்தைகளை கவனித்துக்கொள் – கணவருக்கு கடிதம் எழுதவிட்டு கள்ளக் காதலனுடன் பெண் தற்கொலை !!

தெலுங்கானாவின் மேடக் மாவட்டத்தில் தண்டவாளம் அருகே பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவர் தனது கள்ளக் காதலனுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. பலியானவர் லாரி ஓட்டுநரின் மனைவி 29 வயது எம்.சந்தோஷி என அடையாளம் காணப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை காலை காணாமல் போன அந்த பெண்ணின் உடல் மாலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பெண் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஷங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சந்தோஷிக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்த
 

தெலுங்கானாவின் மேடக் மாவட்டத்தில் தண்டவாளம் அருகே பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவர் தனது கள்ளக் காதலனுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
பலியானவர் லாரி ஓட்டுநரின் மனைவி 29 வயது எம்.சந்தோஷி என அடையாளம் காணப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை காலை காணாமல் போன அந்த பெண்ணின் உடல் மாலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பெண் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஷங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

சந்தோஷிக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்த ரவி குமார் என்ற நபருடன் கள்ளக் காதல் இருந்து வந்துள்ளது. தனது திருமணத்திற்கு முன்பு ஒரு ஷாப்பிங் மாலில் பணியாற்றியபோது ரவி என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். திருமணம் ஆன பிறகு நீண்ட நாட்கள் இடைவெளிக்கு பிறகு அவரை சந்தித்துள்ளார். இருவரும் நெருங்கி பழகி உள்ளனர். பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதை கணவர் கண்டித்ததால் செவ்வாய்க்கிழமை காலை, சந்தோஷி தனது கணவருடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர், அவரது கணவர் மல்கஜ்கிரி காவல் நிலையத்தில் காணாமல் புகார் அளித்தார். செவ்வாய்க்கிழமை மாலை செகுந்தாவில் உள்ள ரயில் தடங்களுக்கு அருகே சந்தோஷி மற்றும் அவரது கள்ளக் காதலன் உடல் கண்டெடுக்கப்பட்டது.
தற்கொலைசெய்து கொள்வதற்கு முன் சந்தோஷி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், “நான் என் வாழ்க்கையை முடிக்கிறேன், என் மரணத்திற்கு யாரும் பொறுப்பல்ல. என் குழந்தைகளை கவனித்துக் கொள்ளுங்கள்.” என எழுதியிருந்தார்.

அவருடன் தற்கொலை செய்து கொண்ட ரவி மெட் பிளஸ் ஊழியர் அடையாளம் காணப்பட்டுள்ளது.