×

`நடத்தையில் சந்தேகம்; சுத்தியலால் அடித்துக் கொலை!’- மனைவியை இழந்த 31வது நாளில் கணவன் தற்கொலை

நடத்தையின் மீது சந்தேகப்பட்டு மனைவியை சுத்தியலால் அடித்துக் கொன்ற கணவன், சிறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சி, ஆட்டந்தாங்கல் பாலமுருகன் நகரைச் சேர்ந்தவர் அஞ்சம்மாள் (33). இவரது கணவர் ராமு என்கிற துளசிராம் (35). இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள், ஒரு மகனும் உள்ளனர். மனைவி அஞ்சம்மாள் மீது துளசிராமிற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த கடந்த 16ம் தேதி அஞ்சம்மாளின்
 

நடத்தையின் மீது சந்தேகப்பட்டு மனைவியை சுத்தியலால் அடித்துக் கொன்ற கணவன், சிறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

சென்னை செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சி, ஆட்டந்தாங்கல் பாலமுருகன் நகரைச் சேர்ந்தவர் அஞ்சம்மாள் (33). இவரது கணவர் ராமு என்கிற துளசிராம் (35). இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள், ஒரு மகனும் உள்ளனர். மனைவி அஞ்சம்மாள் மீது துளசிராமிற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த கடந்த 16ம் தேதி அஞ்சம்மாளின் தலையில் சுத்தியலால் அடித்து துளசிராம், கொலை செய்தார். இந்த வழக்கில் சோழவரம் போலீஸார், துளசிராம் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். அவரை பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து, கடந்த 3ம் தேதி பொன்னேரி கிளை சிறையிலிருந்து புழல் மத்திய சிறைக்கு துளசிராம் மாற்றப்பட்டார். மனைவியை கொலை செய்த துளசிராம், நேற்று (17ம் தேதி) மாலை சிறை வளாகத்தில் 1-வது பிளாக்கின் அறை ஜன்னல் கம்பியில் லுங்கியால் தூக்குப்போட்டு துளசிராம் தற்கொலை செய்து கொண்டார். அதைப்பார்த்த சிறைகாவலர்கள் துளசிராமை மீட்டு முதலுதவி அளித்தனர். பின்னர் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், துளசிராம் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதையடுத்து அவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. புழல் சிறை தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் புழல் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.