×

லேட்டாக வந்த கணவன்; கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி!

வேலைக்கு சென்று விட்டு தினமும் தாமதமாக வந்ததால் கொதிக்கும் எண்ணெய்யை கணவன் மீது மனைவி ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அரவிந்த் அஹிவர். இவரது மனைவி சிவ்குமாரி. கூலி வேலை செய்யும் அரவிந்த் அஹிவர் தினமும் வீட்டுக்கு தாமதமாக வருவது வழக்கமாம். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அப்படித்தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட இருவருக்கும் இடையே சண்டை வந்த நிலையில்
 

வேலைக்கு சென்று விட்டு தினமும் தாமதமாக வந்ததால் கொதிக்கும் எண்ணெய்யை கணவன் மீது மனைவி ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அரவிந்த் அஹிவர். இவரது மனைவி சிவ்குமாரி. கூலி வேலை செய்யும் அரவிந்த் அஹிவர் தினமும் வீட்டுக்கு தாமதமாக வருவது வழக்கமாம். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அப்படித்தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட இருவருக்கும் இடையே சண்டை வந்த நிலையில் உறவினர்கள் அவர்களை சமாதானம் செய்துள்ளனர்.

இதனால் கணவன் – மனைவி இருவரும் தூங்க சென்றுள்ளனர். இருப்பினும் கோபம் குறையாத அரவிந்த் மனைவி கொதிக்கும் எண்ணெயை அதிகாலை 5 மணிக்கு தனது கணவர் மீது ஊற்றியுள்ளார். இதில் வலி தாங்க முடியாமல் அரவிந்த் அலறித்துடிக்க அவரை உடனடியாக மீட்ட உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் சிவ்குமாரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கோபத்தில் செய்து விட்டேன் என்று சிவ்குமாரி தன்னுடைய செயலுக்காக வருத்தம் தெரிவித்துள்ளாராம். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.