×

"அச்சச்சோ! அந்த பெட் ரூம் வீடியோவில் இருக்கிறது நான் .."பலான படத்தை பார்த்து அதிர்ச்சியான பெண்.

 

மனைவியிடம் இயற்கைக்கு மாறான வகையில் உறவு கொண்டு அந்த வீடியோவை ஊடகத்தில் வெளியிட்டதாக  கணவன் மீது ஒரு பெண் புகார் கூறினார் 


மகாராஷ்டிரா நாக்பூரில் உள்ள நந்தன்வன் பகுதியில் வசிக்கும் ஒரு 21 வயதான பெண் ,பிலாய் பகுதியினை சேர்ந்த ஒரு 27 வயதான வாலிபரை காதலித்தார் .முதலில் அந்த வாலிபர்தான் அந்த பெண்ணுக்கு வலை வீசி காதலை கூறியதும் ,அந்த பெண் அவரின் வலையில் விழுந்தார் .ஆனால் அந்த வாலிபர் தனக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பதை அந்த பெண்ணிடம் மறைத்து விட்டு காதலித்து அவரை கல்யாணமும் செய்து கொண்டார் .
அதன் பிறகு அந்த பெண்ணுக்கு அவரின்  கணவருக்கு ஏற்கனவே கல்யாணமான விஷயம் தெரிந்துள்ளது .அதனால் அவர் இது பற்றி கணவனிடம் கேட்டு சண்டையிட்டதால் ,அவர் அந்த பெண்ணை அவரின் தாய் வீட்டில் கொண்டு வந்து விட்டார் .ஆனால் அதன் பிறகு அந்த பெண்ணிடம் சமாதானம் பேசி அந்த கணவரிடம் அந்த பெண்ணின் பெற்றோர் அனுப்பி வைத்தனர் .அதன் பிறகு அந்த கணவன் அந்த பெண்ணுக்கு  பல பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் .அந்த பெண்ணின் கூற்றுப்படி அந்த கணவர் தன்னிடம்  இயற்கைக்கு மாறான முறையில் உறவு கொண்டதாகவும் ,பின்னர் அதை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகவும் ,இது பற்றி  கேட்டதற்கு அடித்து துன்புறுத்துவதாகவும்  கூறியுள்ளார் .அக்டோபர் 19 அன்று, அவர்  நந்தன்வன் காவல் நிலையத்தில் தனது கணவர் மீது புகார் அளித்தார்.போலீசார் அந்த பெண்ணின் கணவர் மீது வழக்கு பதிந்து  அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்