×

‘கணவன் கொடூரமாக கொலை: மனைவி தற்கொலை’ தங்கை உறவு முறை கொண்ட பெண்ணை மணந்ததால் நேர்ந்த கதி!

தங்கை உறவு முறை கொண்ட பெண்ணை மணந்து கொண்ட நபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதால், அவரது மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை பழையபேட்டை பகுதியில் வசித்து வந்தவர் காளிராஜ். இவர் அதே பகுதியில் வசித்து வந்த மேகலா என்பவரை காதலித்து, பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார். மேகலா காளிராஜுக்கு உறவு முறையில் தங்கை எனக் கூறப்படுகிறது. இவர்களது திருமணத்துக்கு மேகலா வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திருமணம் ஆன
 

தங்கை உறவு முறை கொண்ட பெண்ணை மணந்து கொண்ட நபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதால், அவரது மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை பழையபேட்டை பகுதியில் வசித்து வந்தவர் காளிராஜ். இவர் அதே பகுதியில் வசித்து வந்த மேகலா என்பவரை காதலித்து, பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார். மேகலா காளிராஜுக்கு உறவு முறையில் தங்கை எனக் கூறப்படுகிறது. இவர்களது திருமணத்துக்கு மேகலா வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திருமணம் ஆன பிறகும் அந்த பகை தொடர்ந்து கொண்டே இருந்துள்ளது. இதனால் அச்சமடைந்த இருவரும் நெல்லை சட்டக்கல்லூரி அருகே தனியாக வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் காளிராஜ் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். மேகலாவின் குடும்பத்தினர் இந்த கொலையை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, கணவனை இழந்த சோகத்தில் இருந்து மேகலா, தனக்கு பாதுகாப்பு கோரியதால் தனியார் பெண்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்.

இந்த நிலையில், காளிராஜை இழந்த சோகத்தில் மேகலா காப்பகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இச்சம்பவம் குறித்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.