×

"புது பொண்டாட்டியில்லாம தூக்கம் வரலையே.." -அடுத்து மாமியார்  வீட்டிலிருந்த மனைவிக்கு கணவனால் நேர்ந்த கதி 

 


 புதுசா கல்யாணமான மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், அவர் மாமியார் வீட்டுக்கு போனதால் கோவப்பட்ட கணவர் அவரை தேடி சென்று கொலை செய்தார் .

தமிழகத்தின் தூத்துக்குடி தாளமுத்துநகர் பாலதண்டாயுத நகரைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி 45 வயதான மாரியம்மாள் . இவர்களது மகள் 19 வயதான மாரிசெல்வியை அவர்கள் செல்லமாக வளர்த்து  வந்தனர் .இந்நிலையில் அந்த பெண்ணை , 5 மாதத்திற்கு முன் தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த 27 வயதான பொன்ராஜுக்கு  திருமணம் செய்து வைத்தனர். கல்யாணமானதும் சில நாள் சந்தோஷமாக போன அவர்கள் வாழ்வில் பிரச்சினைகள் வெடித்தது .இதன் காரணமாக இருவருக்குள்ளும் அடிக்கடி தகறாரு ஏற்பட்டுள்ளது 
ஒரு வாரத்திற்கு முன், தம்பதி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதால்  பொன்ராஜின்  மனைவி கோபித்துக்கொண்டு  தன் தாய்  வீட்டிற்கு போய் விட்டார் . இந்நிலையில் அந்த புது பொண்டாட்டி, மாமியார் வீட்டுக்கு போனதால் அந்த பொன் ராஜுக்கு இரவில் தூக்கம் வராமல் இருந்தார் .இதனால் நேற்று இரவு  நண்பர்கள் 2 பேரை அழைத்துக்கொண்டு  மாமியார் வீட்டிற்கு ,மனைவியை கூட்டி வர பொன்ராஜ் சென்றார். அப்போது கதவை தட்டி தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பினார். வெளியே வந்த மனைவி மாரிசெல்வியை வீட்டுக்கு வருமாறு கூப்பிட்டதற்கு ,அவர் வர மறுத்ததால் அவரை கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளார். தடுக்க வந்த மாமியார் மாரியம்மாளுக்கும் வெட்டு விழுந்தது. பின்னர் பொன்ராஜ் உள்ளிட்ட 3 பேரும் திண்டுக்கல் கோர்ட்டில் சரணடைந்தனர்..