×

"எவ்ளோ திட்டினாலும் அவனை ஏன் தேடி போறே?" -கள்ள காதலனை மறக்காத மனைவிக்கு நேர்ந்த கதி. 

 


கள்ள காதலனை மறக்காத மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தின் சென்னை பிராட்வே புத்தி சாகிப் தெருவில்  வசித்து வரும் 37 வயதான  அப்துல் ரகுமான்  தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார் .இவர் தனது மனைவி யாஸ்மின் மற்றும்  ஒரு மகன், ஒரு மகள் ஆகியோருடன் வசித்து வந்தார் .

இந்நிலையில் அவரின்  மனைவி யாஸ்மினுக்கு வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக அந்த கணவர் சந்தேகப்பட்டு ,அவரின் மனைவியுடன்  அடிக்கடி சண்டை போட்டு வந்தார் . அந்த கணவர்  எவ்வளவோ கண்டித்தும் கள்ளத்தொடர்பை யாஸ்மின் கைவிடவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அவர் யாஸ்மினுக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து , அவர் அயர்ந்து தூங்கியதும் ,அவரின் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார் .. பின்னர் போலீசாரிடம் இருந்து தப்பிக்க யாஸ்மின் தூக்க மாத்திரை சாப்பிட்டு மயங்கி கிடந்ததாக அக்கம் பக்கத்தினரிடம் நாடகமாடினார் . ஆனால்  பிரேத பரிசோதனை அறிக்கையில் கழுத்தை நெரித்து கொன்றது அம்பலமானதால் போலீசார் வழக்குப்பதிவு செய்து , அப்துல்ரகுமானை அழைத்து விசாரணை செய்தனர்.
அதில் அப்துல்ரகுமான், தனது மனைவியை கள்ள காதல் தகராறில் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, அவர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியதை ஒப்புக்கொண்டார் 
இந்த கொலை  தொடர்பாக போலீசார் அப்துல் ரகுமானை கைது செய்து சிறையில் அடைத்தனர்.