×

"ப்ளூ பிலிமில் இருப்பது என் பொண்டாட்டி மாதிரியிருக்கே" -சந்தேகப்பட்ட கணவன் -அடுத்து நேர்ந்த கொடுமை 

 

ஆபாச படத்தில் நடித்ததாக  மனைவி மீது சந்தேகப்பட்ட கணவன் ,அவரை  கத்தியால் குத்தி கொலை செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.


கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே ராமநகர் மாவட்டம் ராமநகர் டவுன் ரகுமான் நகரை சேர்ந்த 40 வயதான ஜாகீர் பாஷா,பெங்களூரில் ஆட்டோ ஓட்டி வருகிறார் .அவர் தனது 33 வயதான  மனைவி மூபினாவுடன் வசித்து ,ஐந்து குழந்தைகளை பெற்றெடுத்தார் .

ஜாகீர் பாஷா அடிக்கடி ப்ளூ பிலிம் பார்க்கும் வழக்கமுள்ளவர் .அதன்படி அவர் சமீபத்தில் பார்த்த ஒரு ஆபாச படத்தில் நடித்திருந்த பெண்ணின் தோற்றமும் அவரின் மனைவியின் தோற்றமும் ஒரே மாதிரியாக இருந்துள்ளது .இதானல் அவர் அதில்  நடித்தது தனது  மனைவிதானோ என்று சந்தேகப்பட்டு அவரின் மனைவியை அடித்து கொடுமை செய்து வந்தார் .அந்த மனைவி தான் நடிக்கவில்லை  என்று கூறியும் அவர் அந்த பென்னை அடித்து உதைத்ததில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துஇறந்து  விட்டார் .பிறகு அங்கிருந்து அந்த கணவர் தப்பித்து ஓடி விட்டார் .மகள் கொலை செய்யப்பட்டதையறிந்த அந்த பென்னின் தந்தை அங்குள்ள போலீசில் சென்று தன்  மருமகன் மீது புகார் கொடுத்தார்
 மூபினாவின் பெற்றோர் கொடுத்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஜாகீர் பாஷாவை தேடி வருகின்றனர்.