×

"தூங்குற புருஷனை தூக்கிட்டு போயி ...." -மாமியாரும் மனைவியும் சேர்ந்து ஒரு கணவனை என்ன செஞ்சாங்க தெரியுமா ?

 


கள்ள காதல் தகராறில் ஒரு கணவனை மனைவி மற்றும் மாமியார் காதலனோடு சேர்ந்து கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது .


தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே சின்னகலையம்புத்தூர் ஆர்.ஜி நகரில்  43 வயதான  செல்வராஜ்  என்பவர் தன் மனைவி மற்றும் மாமியாருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார் .அவர் அந்த பகுதியில் பால் வியாபாரம் செய்து வந்தார் .மேலும் அந்த பகுதியில்  உள்ள மக்களுக்கு தினமும் அதிகாலையிலேயே பால் வினியோகம் செய்தார் .இந்நிலையில் செல்வராஜ் மனைவி ஜெயசுதா,திண்டுக்கல் பித்தளைபட்டியைச் சேர்ந்த 22 வயதான ஜெகதீஸ்வரனுடன் கள்ள தொடர்பில் இருந்துள்ளார்.இது அந்த வீட்டிலிருந்த மாமியாருக்கும் தெரிந்து அவர் கண்டுகொள்ளவில்லை  இதையறிந்த அந்த கணவர் செல்வராஜ்  குடிப்பழக்கத்துக்கு அடிமையானார்  இவர் கடந்த ஜன31 ம்தேதி இது சம்பந்தமாக சன்டை போட்டுவிட்டு தூங்கிவிட்டார் .
அதன் பிறகு தூங்கிய அந்த கணவனை அவரது மனைவி ஜெயசுதா, மாமியார் ராஜம்மாள்  மற்றும் காதலன் ஜெகதீஸ்வரன் மூவரும் சேர்ந்து ஒரு இடத்திற்கு தூக்கி சென்று அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின் அவரின் உடலை நெய்க்காரபட்டி - மடத்துக்குளம் ரோடு இணைப்புச் சாலையில்  போட்டு விட்டு சென்றுள்ளனர். பிறகு போலீசார் அவரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் அவரை அவரின் குடும்பத்தினரே கள்ள காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததை கண்டுபிடித்தனர் .பிறகு பழநி தாலுகா போலீஸார் அவர்கள் மூவரையும் கைது செய்து உள்ளனர்.