×

 "அந்த சவுண்டு சர்விஸ்காரனோட சம்சாரம் தொடர்பு வச்சிருக்காளே.." -பார்த்த கணவனுக்கு நேர்ந்த கதி 

 


மனைவியின் கள்ள தொடர்பை தட்டி கேட்ட கணவனை ஒரு மனைவி ஆள் வைத்து தீர்த்து கட்டிய சம்பவம் நடந்துள்ளது .


தமிழகத்தின் சென்னையின் மாங்காட்டை சேர்ந்த 35வயதான செல்வராஜ் தன்னுடைய மனைவி காமாட்சி மற்றும்  3 மகள்களோடு  வசித்து வந்தார் . அந்த செல்வராஜின் நண்பர் வெற்றி என்பவர் அதே பகுதியில் சவுண்டு சர்விஸ் நடத்தி வருகிறார் .இந்நிலையில் தன் நண்பரை அடிக்கடி பார்க்க வந்த வெற்றிக்கும் அவரின் நண்பர் செல்வராஜ் மனைவி காமாட்சிக்கும்  கள்ள தொடர்பு ஏற்பட்டது .
இந்த விஷயம் அந்த கணவருக்கு தெரிந்ததும் அவர் மனைவியை கண்டித்தார் .இதனால் அந்த பெண் தன்னுடைய கணவரை  கொலை செய்ய சொல்லி தன் காதலன் வெற்றியிடம் கூறினார் .
அதனால் சில நாட்களுக்கு முன்பு செல்வராஜை . அந்த வெற்றி அவரின் லோடு ஆட்டோ தீப்பற்றி எரிவதாக பொய் சொல்லி இரவில் வர சொன்னார் .அதை நம்பி இரவில் அந்த இருட்டான இடத்திற்கு அவர் வந்ததும், அங்கு ஒளிந்திருந்த வெற்றியின் ஆட்கள் அவரை அருவாள் கொண்டு வெட்டிவிட்டு ஓடி விட்டனர் .பின்னர் அங்கு ஒளிந்திருந்த வெற்றி அந்த செல்வராஜை ஒரு ஹாஸ்ப்பிட்டலில் சேர்த்ததும் அவர் அங்கு இறந்தார் .பின்னர் போலிசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டதில் கள்ள காதல் தகராறில் மனைவியே காதலணை ஏவி கணவரை கொன்றதை கண்டறிந்து அனைவரையும் விசாரித்து வருகின்றனர் .