×

வேறு ஒருவருடன் செல்போனில் பேச்சு : மனைவியை அடித்துக் கொன்ற கணவன்!

திருச்சி அருகே குழந்தைகள் கண்முன்னே மனைவியை கணவன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. திருச்சி மாவட்டம் தில்லைநகர் செங்குளத்தான் பகுதியில் வசித்து வருபவர் தவசீலன். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்கள் இருவரும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும் 2 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். ராஜேஸ்வரி அடிக்கடி வேறு ஒரு நபரிடம் செல்போனில் பேசி வந்ததை அறிந்த தவசீலன், அவரை கண்டித்திருக்கிறார். மேலும்
 

திருச்சி அருகே குழந்தைகள் கண்முன்னே மனைவியை கணவன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருச்சி மாவட்டம் தில்லைநகர் செங்குளத்தான் பகுதியில் வசித்து வருபவர் தவசீலன். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்கள் இருவரும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும் 2 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். ராஜேஸ்வரி அடிக்கடி வேறு ஒரு நபரிடம் செல்போனில் பேசி வந்ததை அறிந்த தவசீலன், அவரை கண்டித்திருக்கிறார். மேலும் மன்னார்குடியில் தனது தாய் வீட்டிற்கு வருமாறு ராஜேஸ்வரியை அழைத்திருக்கிறார்.

அதற்கு ராஜேஸ்வரி மறுப்பு தெரிவிக்கவே இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. நேற்று இரவும் இவர்களுக்கு இடையே சண்டை வந்த நிலையில், ராஜேஸ்வரியின் சகோதரி சகுந்தலா இருவரையும் சமாதானப்படுத்தி வைத்துள்ளார். இந்த நிலையில், இன்று காலை ராஜேஸ்வரி வீட்டில் இருந்து அதிக அளவில் பாடல் சத்தம் கேட்டுள்ளது. மேலும் வீட்டின் முன்பக்க கதவு பூட்டி இருந்ததால் சந்தேகமடைந்த சகுந்தலா, கதவை திறந்து பார்த்தபோது ராஜேஸ்வரி ரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

இது தொடர்பாக சகுந்தலா போலீசாருக்கு தகவல் கொடுத்ததன் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் ராஜேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் ராஜேஸ்வரியின் மகனிடம் நடத்திய விசாரணையில், தவசீலன் ராஜேஸ்வரியை கட்டையால் அடித்தும் கழுத்தை நெரித்தும் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. அதனடிப்படையில் தலைமறைவான தவசீலனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.