×

மனைவியின் ஆபாச புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட கணவன் கைது!

மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட கணவன் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி அருகே தக்கலை சேர்ந்த ராஜமுருகன் என்பவருக்கும், மதுரை சோழவந்தானை சேர்ந்த ரம்யா என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது . ராஜமுருகன் தனது சொந்த ஊரில் கம்ப்யூட்டர் சென்டர் ஒன்றை நடத்தி வந்துள்ளார். திருமணமான சில நாட்களிலேயே ராஜமுருகன் குடிப்பழக்கத்தால் மனைவியை சித்ரவதை செய்து வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் திருமணமான 20 நாளிலேயே ரம்யா தனது தாய்
 

மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட கணவன் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி அருகே தக்கலை சேர்ந்த ராஜமுருகன் என்பவருக்கும், மதுரை சோழவந்தானை சேர்ந்த ரம்யா என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது . ராஜமுருகன் தனது சொந்த ஊரில் கம்ப்யூட்டர் சென்டர் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

திருமணமான சில நாட்களிலேயே ராஜமுருகன் குடிப்பழக்கத்தால் மனைவியை சித்ரவதை செய்து வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் திருமணமான 20 நாளிலேயே ரம்யா தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் ஆத்திரமடைந்த ராஜமுருகன் தனது மனைவியை பழிவாங்க எண்ணி அவரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கணவர் சோழவந்தான் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

rep image

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த ராஜமுருகனை தேடி வந்தனர். கடந்த ஆறு மாத காலமாக தலைமறைவாக இருந்த அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார் கைது செய்யப்பட்ட ராஜமுருகன் வாடிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.