×

மதுபோதையில் தகராறு : மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன் கைது!

மதுபோதையில் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவனை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் அருகே உள்ள பசும்பலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். 32 வயதான இவருக்கு முருகாம்மாள் என்ற மனைவியும், மணிகண்டன்(8), பரத்(5) என்ற இரு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் மதுபோதைக்கு அடிமையான கண்ணன், அடிக்கடி தனது மனைவி முருகாம்மாளுடன் தகராறில் எடுபட்டு வந்துள்ளார். இதனால் ஒருக்கட்டதில் மனமுடைந்த முருகாம்மாள் கோபித்துக்கொண்டு அதே ஊரில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு சென்று விட்டார். இதையடுத்து மனைவியை
 

மதுபோதையில் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவனை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் அருகே உள்ள பசும்பலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். 32 வயதான இவருக்கு முருகாம்மாள் என்ற மனைவியும், மணிகண்டன்(8), பரத்(5) என்ற இரு குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில் மதுபோதைக்கு அடிமையான கண்ணன், அடிக்கடி தனது மனைவி முருகாம்மாளுடன் தகராறில் எடுபட்டு வந்துள்ளார். இதனால் ஒருக்கட்டதில் மனமுடைந்த முருகாம்மாள் கோபித்துக்கொண்டு அதே ஊரில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதையடுத்து மனைவியை வீட்டுக்கு அழைத்து வர கண்ணன் சென்ற போது கண்ணனுக்கும் முருகாம்மாளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த கண்ணன் அருகே கிடந்த அரிவாளை எடுத்து மனைவியை வெட்டியுள்ளார். இதையடுத்து சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் குறித்து தகவலறிந்த வி.களத்தூர் போலீசார் கண்ணனை கைது செய்து ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைத்துள்ளனர்.