×

முன்விரோதத்தால் பால் முகவர் மீது கொலைவெறி தாக்குதல்!

பால் முகவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த பால் முகவர் ஜெயக்குமார். இவரை நேற்றிரவு 9 மணியளவில் சசிக்குமார் என்பவர் கத்தியால் குத்தி கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால் படுகாயம் அடைந்த ஜெயக்குமாரை பொதுமக்கள் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் . சசிக்குமா ர் கடந்த ஓராண்டுக்கு முன் ஜெயக்குமாரின் கடைக்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.
 

பால் முகவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த பால் முகவர் ஜெயக்குமார். இவரை நேற்றிரவு 9 மணியளவில் சசிக்குமார் என்பவர் கத்தியால் குத்தி கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால் படுகாயம் அடைந்த ஜெயக்குமாரை பொதுமக்கள் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் .

சசிக்குமா ர் கடந்த ஓராண்டுக்கு முன் ஜெயக்குமாரின் கடைக்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஜெயக்குமார், சசிக்குமார் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக தெரிகிறது. இந்த முன்விரோதம் காரணமாக தான் ஜெயக்குமார் மீது சசிக்குமார் நேற்று கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சசிக்குமாரை கைது செய்துள்ளனர்.

இத்தனிடனையே பால் முகவர் மீது கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட சம்பவத்திற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.