×

“பெயில்ல வந்ததுக்கு ஜெயில்லே இருந்திருக்கலாம்” -வழிப்பறியில் ஈடுபட்டவர் வெட்டி கொலை

தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் மூன்று பேரிடம் பணம் பறிக்க முயன்ற ஜாமீனில் வந்த குற்றவாளி அடித்து கொல்லப்பட்டார். கோவை கணபதியில் வசிக்கும் கரண் குமார் என்பவர் ஞாயிற்றுக்கிழமை இரவு, குடிபோதையில் மூன்று பயணிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ ரிக்ஷாவை தடுத்தார். அப்போது அவர்களிடம் கத்தியை காண்பித்து அச்சுறுத்தி தனக்கு பணம் தருமாறு கேட்டார். அப்போது அந்த பயணிகள் பணம் கொடுக்க மறுத்தபோது, கரண் அவர்களை கத்தியால் தாக்க முயன்றுள்ளார் . இதைத் தொடர்ந்து, மூவரும் அவரிடமிருந்து கத்தியைப் பறித்து,
 

தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் மூன்று பேரிடம் பணம் பறிக்க முயன்ற ஜாமீனில் வந்த குற்றவாளி அடித்து கொல்லப்பட்டார்.

கோவை கணபதியில் வசிக்கும் கரண் குமார் என்பவர் ஞாயிற்றுக்கிழமை இரவு, குடிபோதையில் மூன்று பயணிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ ரிக்‌ஷாவை தடுத்தார். அப்போது அவர்களிடம் கத்தியை காண்பித்து அச்சுறுத்தி தனக்கு பணம் தருமாறு கேட்டார்.

அப்போது அந்த பயணிகள் பணம் கொடுக்க மறுத்தபோது, ​​கரண் அவர்களை கத்தியால் தாக்க முயன்றுள்ளார் . இதைத் தொடர்ந்து, மூவரும் அவரிடமிருந்து கத்தியைப் பறித்து, அவரை இரும்புச் சங்கிலியால் தலையில் தாக்கினர். இந்த தாக்குதலில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
பின்னர் மறுநாள் காலையில், பி முத்தன் (24), ஏ சீனிவாசன் (23), எம்.ரவிசங்கர் (22) என அடையாளம் என்ற மூன்று பயணிகள் சரவணம்பட்டி போலீசாரிடம் சரணடைந்தார்கள்
போலீஸ் விசாரணையில் இறந்த நபர் கொலை மற்றும் கொள்ளை உள்ளிட்ட எட்டு கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர் . அவர் குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செயப்பட்ட வழக்கில் ஜாமீன் பெற்ற பின்னர் சமீபத்தில் சிறையிலிருந்து வெளியே வந்தார் என தெரியவந்துள்ளது .