×

“இதுக்காகவா பெத்த மகனுக்கு தீ வைப்பே”-தந்தையால் உயிருக்கு போராடும் சிறுவன் .

தனக்கு பீடி வாங்கிக்கொண்டு வர லேட்டானதால் கோபமுற்ற ஒரு தந்தை தனது பத்து வயதான மகனை தீ வைத்து கொளுத்தினார். ஹைதராபாத்தின் கேபிபிபி பகுதியில் வசிக்கும் ஒரு தொழிலாளிக்கு 19 வயதான ஒரு மகளும் ,10 வயதில் சரண் என்ற மகனும் இருக்கிறார்கள் .அந்த தந்தைக்கு பீடி பிடிக்கும் பழக்கம் இருந்தது .அதனால் அவர் அடிக்கடி பீடி புகைத்துக்கொண்டே இருப்பார் . கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அந்த தந்தை தன்னுடைய 10 வயதான மகன் சரனிடம் காசு கொடுத்து
 

தனக்கு பீடி வாங்கிக்கொண்டு வர லேட்டானதால் கோபமுற்ற ஒரு தந்தை தனது பத்து வயதான மகனை தீ வைத்து கொளுத்தினார். 

ஹைதராபாத்தின் கேபிபிபி பகுதியில் வசிக்கும் ஒரு தொழிலாளிக்கு 19 வயதான ஒரு மகளும் ,10 வயதில் சரண் என்ற மகனும் இருக்கிறார்கள் .அந்த தந்தைக்கு பீடி பிடிக்கும் பழக்கம் இருந்தது .அதனால் அவர் அடிக்கடி பீடி புகைத்துக்கொண்டே இருப்பார் .

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அந்த தந்தை தன்னுடைய 10 வயதான மகன் சரனிடம் காசு கொடுத்து பீடி வாங்கி வரச்சொன்னார் .தந்தையிடம் காசு வாங்கிக்கொன்டு கடைக்கு சென்ற அந்த சரண் பீடி வாங்கிக்கொண்டு லேட்டாக வந்துள்ளார் .இதனால் கோபமுற்ற அந்த தந்தை மகனிடம் ஏன் லேட்டாக பீடி வாங்கிக்கொண்டு வந்தாய் என்று கேட்டார் .அதற்கு அந்த சிறுவன் சரியான விளக்கம் கொடுக்கவில்லை .இதனால் அந்த தந்தை அங்கிருந்த டர்பண்டைனை  எடுத்து அந்த சிறுவனின் தலையில் கொட்டி அவனுக்கு தீ வைத்தார் .இந்த தீயில் சிக்கிய அந்த சிறுவனின் உடல் முழுவதும் தீ பிடித்து எரிந்தது .இப்படி தீயில் எரியும் அந்த சிறுவனை அங்குள்ளோர் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார்கள் .அங்கு அந்த சிறுவன் உயிருக்கு போராடிய நிலையில் ஐசியூ வில் சிகிச்சை பெற்று வருகிறார் .இந்த நிலையில் அந்த சிறுவனின் 19 வயதான சகோதரி போலீசில் தன்னுடைய தந்தை மீது புகார் கூறினார் .போலீசார் வழக்கு பதிவு செய்து மகனை கொளுத்திய தந்தையை தேடி வருகிறார்கள் .