×

"பதினைந்து வயசு சிறுவர்களிடம் சிக்கிய 13 வயது சிறுமி ... "உருக்குலைந்து கிடந்த ஊனமுற்ற பெண்.. 

 

 13 வயதான மாற்றுத்திறனாளி பெண்ணை  கூட்டு பலாத்காரம் செய்த 5 சிறுவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 

கர்நாடக மாநிலம் கலபுரகி டவுனில் உள்ள ஒரு காலனியில் 13 வயது சிறுமி தன்  பெற்றோருடன் வசித்து வந்தார் . இந்த சிறுமியின் பெற்றோர் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள். அந்த வீட்டுக்கு அருகிலே 15 வயதான ஐந்து சிறுவர்கள் அடிக்கடி கிரிக்கெட் விளையாடி வருவார்கள் .அப்போதெல்லம்  அந்த சிறுவர்கள் அந்த மாற்று திறனாளி பெண்ணை பார்த்துள்ளார்கள் .அதன் பிறகு அவர்கள் அந்த சிறுமியின் பெற்றோருடன் நட்பாக பழகுவது போல் நடித்துள்ளார்கள் .அதனால் அந்த பெண்ணின் பெற்றோர் அவர்களை நம்பி அந்த பெண்ணை தனியாக வீட்டில் விட்டுவிட்டு வேளைக்கு சென்றனர் .
இந்நிலையில் கடந்த 5ம் தேதியன்று அந்த ஐந்து சிறுவர்களும் அந்த தனியாக இருந்த மாற்று திறனாளி பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துவிட்டு ஓடி விட்டனர் .பின்னர் வீட்டுக்கு வந்த அவரின் பெற்றோர் தங்கள் மகள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை பார்த்து அங்குள்ள டாக்டரிடம் கூட்டி சென்றனர் .அப்போது அந்த பெண்ணை பரிசோதனை செய்த டாகடர் அந்த பெண் பலரால் பலாத்காரம் செய்யப்பட்ட தகவலை சொன்னதும் ,அதை  கேட்டு அதிர்ச்சியான அந்த பெற்றோர் போலீசில் புகார் தந்தனர் .போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து அந்த சிறுவர்களை கைது செய்து சிறுவர் பள்ளிக்கு அனுப்பினர் .