×

“கால் எப்படியிருந்தா என்ன ,ஆள் எப்படியிருக்கான்னு பாருங்கடா” -என ஊனமுற்ற பெண்ணை தூக்கிய மூவர் .

கால் சரியில்லாத ஒரு ஊனமுற்ற பெண்ணை ஏழு ஆண்டுக்கு முன்பு பலாத்காரம் செய்ததாக மூவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார்கள் . மும்பையில் 24 வயதான ஒரு ஊனமுற்ற ஒரு பெண் ஒரு குடும்பத்தில் வசித்து வந்தார் .அவருக்கு கால் ஊனமுற்றதால் அவரை கல்யாணம் செய்து கொடுக்காமல் வீட்டிலேயே வைத்திருந்தார்கள் .ஏழு ஆண்டுக்கு முன்பு அதாவது 2013ம் ஆண்டு அவரின் வீட்டிற்கு அவரின் மைத்துனியின் உறவினர் ஒருவர் அடிக்கடி வருவார் .அப்போது அவரோடு சேர்ந்து அவரின்
 

கால் சரியில்லாத ஒரு ஊனமுற்ற பெண்ணை ஏழு ஆண்டுக்கு முன்பு பலாத்காரம் செய்ததாக மூவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார்கள் .

மும்பையில் 24 வயதான ஒரு ஊனமுற்ற ஒரு பெண் ஒரு குடும்பத்தில் வசித்து வந்தார் .அவருக்கு கால் ஊனமுற்றதால் அவரை கல்யாணம் செய்து கொடுக்காமல் வீட்டிலேயே வைத்திருந்தார்கள் .ஏழு ஆண்டுக்கு முன்பு அதாவது 2013ம் ஆண்டு அவரின் வீட்டிற்கு அவரின் மைத்துனியின் உறவினர்  ஒருவர் அடிக்கடி வருவார் .அப்போது அவரோடு சேர்ந்து அவரின் நண்பர்கள் இருவரும் அவரை பலாத்காரம் செய்துள்ளார்கள் .பின்னர் இந்த விஷயத்தை  வெளியே கூறக்கூடாது என்றும் .மீறி சொன்னால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று மிரட்டிவிட்டு சென்று விட்டார்கள் .அதனால் அந்த பெண் அப்போது இந்த விஷயத்தை வெளியே சொல்லாமல் மறைத்துள்ளார் .

இந்நிலையில் அந்த பெண் சமீபத்தில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டார் .அதனால் அவரை ஒரு மன நல ஆலோசகரிடம் அழைத்து சென்றார்கள் அப்போது அவர் அந்த ஆலோசகரிடம் தான் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பலாத்காரம் செய்யப்பட்ட விஷயத்தினை கூறியுள்ளார் அதை  கேட்ட அவரின் உறவினர்கள்  உடனே காவல்நிலையம் சென்று அந்த ஊனமுற்ற பெண்ணை கெடுத்தவர்கள் மீது புகார் கூறினார்கள் .போலீசார் அவர்களின் புகாரின் அடிப்படையில் அந்த மூவர் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்தார்கள் .பின்னர் போலீசார் அந்த குடும்பத்தின் மீது ஏற்கனவே வரதட்சணை புகாரை அந்த மைத்துனியின் குடும்பத்தார் கொடுத்துள்ளார்கள் ,அந்த வழக்கு நடந்து வருகிறது .அந்த வழக்குக்கும் இதற்கும் ஏதாவது சம்பந்தமிருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறார்கள் .