×

“குளிர் பானம் கொடுத்து ,ஜிம்முக்குள் கெடுத்து …” ஒரு ஜிம் ட்ரைனர் பண்ண வேலைய பாருங்க

ஒரு ஜிம்முக்கு பயிர்ச்சியாளராக வந்த இளம் பெண்ணை அந்த ஜிம்மில் இருக்கும் இன்னொரு ஆண் ட்ரைனரால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது புனேவின் காரடி பகுதியில் வசிக்கும் தீபக் சவுகுலே என்ற 28 வயதான உடற்பயிற்சி பயிற்சியாளர் அங்குள்ள ஒரு ஜிம்மில் ட்ரைனராக பணி புரிந்தார் .அந்த ஜிம்மில் இன்னொரு இளம் பெண்ணும் பெண்களுக்கு பயிற்சியாளராக பணி புரிந்தார் .இந்நிலையில் அந்த தீபக்குக்கு அந்த பெண் ட்ரைனர் மீது ஆசை பிறந்துள்ளது .அதனால் அந்த பெண் ட்ரைனரிடம்
 


ஒரு ஜிம்முக்கு பயிர்ச்சியாளராக வந்த இளம் பெண்ணை அந்த ஜிம்மில் இருக்கும் இன்னொரு ஆண் ட்ரைனரால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது


புனேவின் காரடி பகுதியில் வசிக்கும் தீபக் சவுகுலே என்ற 28 வயதான உடற்பயிற்சி பயிற்சியாளர் அங்குள்ள ஒரு ஜிம்மில் ட்ரைனராக பணி புரிந்தார் .அந்த ஜிம்மில் இன்னொரு இளம் பெண்ணும் பெண்களுக்கு பயிற்சியாளராக பணி புரிந்தார் .இந்நிலையில் அந்த தீபக்குக்கு அந்த பெண் ட்ரைனர் மீது ஆசை பிறந்துள்ளது .அதனால் அந்த பெண் ட்ரைனரிடம் அடிக்கடி இரவு டின்னருக்கு போகலாம் வா என்று கூப்பிடுவார் .அப்போதெல்லாம் அந்த பெண் மறுத்து வந்துள்ளார் .
அதன் பிறகு டிசம்பர் 17 ம் தேதி அந்த பெண்ணை இரவு டின்னருக்கு கூப்பிட்டார் .அப்போது அந்த பெண் மறுக்கவே அவருக்கு ஒரு குளிர் பானம் கொடுத்து குடிக்க சொன்னார் .அதை வாங்கி குடித்த அந்த பெண் மயக்கமானார் .ஏனெனில் அந்த தீபக் அதில் மயக்க மருந்தை கலந்திருந்தார் .பின்னர் அந்த பெண் மயக்க மானதும் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .மேலும் அந்த காட்சியை வீடியோவும் எடுத்துள்ளார் . .சிறிது நேரம் கழித்து, அந்த பெண் சுயநினைவு அடைந்தார் . அப்போது அந்த பெண்ணை அவர் மிரட்டியதுடன், இந்த சம்பவம் குறித்து யாரிடமாவது சொன்னால் அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக கூறினார்.அதன் பிறகு அவரை அங்கேயே விட்டு விட்டு அவர் தப்பித்து சென்று விட்டார்.பின்னர் அதிர்ச்சியடைந்த அந்த பெண் சந்தன் நகர் காவல் நிலையத்திற்குச் சென்று தீபக் சவுகுலே மீது புகார் அளித்தார். இது குறித்து சந்தன் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்ட பின்னர், குற்றம் சாட்டப்பட்ட தீபக் தலைமறைவாக உள்ளார், மேலும் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.