×

“பேட்ட புடிடா ,நிர்வாணமா ஓடுடா..” -கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டவருக்கு கிளுகிளுப்பான தண்டனை.

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட நபருக்கு அந்த ஊர் மக்கள் நிர்வாணமாக ஓடவைத்து தண்டனை கொடுத்த சம்பவம் ஊடகத்தில் வெளியானது . குஜராத்தில் உள்ள தேவபூமி துவாரகா மாவட்டத்தின் கம்பாலியா நகரத்தில் ஒரு வாலிபர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தார் ,அவர் இந்த கிரிக்கெட் சூதாட்ட பந்தயங்களை சமூக ஊடகத்திலும் அரங்கேற்றினார் .முக்கியமாக பேஸ் புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்தார் .அதனால் அந்த ஊர் மக்கள் கோபமடைந்தார்கள் அதனால் அந்த ஊரிலுள்ள சிலர் ஒன்று சேர்ந்து கொண்டு அந்த
 

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட நபருக்கு அந்த ஊர் மக்கள் நிர்வாணமாக ஓடவைத்து தண்டனை கொடுத்த சம்பவம் ஊடகத்தில் வெளியானது .


குஜராத்தில் உள்ள தேவபூமி துவாரகா மாவட்டத்தின் கம்பாலியா நகரத்தில் ஒரு வாலிபர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தார் ,அவர் இந்த கிரிக்கெட் சூதாட்ட பந்தயங்களை சமூக ஊடகத்திலும் அரங்கேற்றினார் .முக்கியமாக பேஸ் புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்தார் .அதனால் அந்த ஊர் மக்கள் கோபமடைந்தார்கள் அதனால் அந்த ஊரிலுள்ள சிலர் ஒன்று சேர்ந்து கொண்டு அந்த நபருக்கு வினோதமான முறையில் தண்டனை கொடுக்கு முடிவு செய்தார்கள்
அதன் படி அந்த கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டவரின் கையில் கிரிக்கெட் பேட்டை கொடுத்து, அதை பிடித்துக்கொண்டே நிர்வாணமாக அந்த ஊரிலுள்ள முக்கியமான பகுதியில் அணிவகுப்பு நடத்தினார்கள் .இந்த சம்பவத்தின் வீடியோவை அவர்கள் செவ்வாய்க்கிழமை சமூக ஊடகங்களில் பதிவேற்றியுள்ளார்கள் ..அதன் பின்னர் அவர்களின் இந்த நடவடிக்கை போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது .போலிசார் விரைந்து வந்தார்கள் .அவர்கள் இப்படி நிர்வாணமாக ஓடிய நபரை பற்றி விசாரித்த போது அவர் மீது ஏற்கனவே இதேபோல் பல சூதாட்ட வழக்குகள் உள் பட மேலும் பல வழக்குகள் இருப்பதாக கண்டரிடந்தார்கள் ,.அதன் பிறகு அவரை இநத நிர்வாண நிலைக்கு ஆளாக்கிய ஐந்து போரையும் போலீசார் கைது செய்தார்கள் .அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது .அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்களுக்கும் அந்த நபருக்கும் ஏற்கனவே பழைய பகையும் இருந்துள்ளதையும் போலீசார் கண்டு பிடித்தார்கள் .அந்த பகையின் விளைவாக கூட இப்படி செய்திருக்கலாம் என்ற போலீசார் மேற்கொண்டு விசாரித்து வருகிறார்கள் .