×

பலாத்காரத்தால் சிறுமி கர்ப்பமானார் -பணத்தால் டாக்டர் கலைத்தார் – குப்பை தொட்டியில் கருவை கொட்டிய போது மாட்டினார் .

தவறான வழியில் கர்ப்பமான 15 வயது சிறுமியின் ஐந்து மாத கர்ப்பத்தை, பணத்துக்காக கலைத்த டாக்டரும் ,கெடுத்த வாலிபரும் கைது செய்யப்பட்டனர் . குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 59 வயதான டாக்டர் சேதன் ஷா என்பவர் ஒரு க்ளினிக் நடத்தி வருகிறார். அங்கு மணிநகர் பகுதியில் வசிக்கும் ஷா, கடந்த 29 ஆண்டுகளாக‘கெவல் மெடிகேர் சென்டர்’ என்ற மருத்துவமனையை நடத்தி வருகிறார்.அவரின் க்ளினிக்கிற்கு கடந்த ஜூலை 6ம் தேதி சனிக்கிழமையன்று ஒரு 15 வயது சிறுமி வந்தார்
 

தவறான வழியில் கர்ப்பமான 15 வயது சிறுமியின் ஐந்து மாத கர்ப்பத்தை, பணத்துக்காக கலைத்த டாக்டரும் ,கெடுத்த வாலிபரும் கைது செய்யப்பட்டனர் .

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 59 வயதான டாக்டர் சேதன் ஷா என்பவர் ஒரு க்ளினிக் நடத்தி வருகிறார்.


அங்கு மணிநகர் பகுதியில் வசிக்கும் ஷா, கடந்த 29 ஆண்டுகளாக‘கெவல் மெடிகேர் சென்டர்’ என்ற மருத்துவமனையை நடத்தி வருகிறார்.அவரின் க்ளினிக்கிற்கு கடந்த ஜூலை 6ம் தேதி சனிக்கிழமையன்று ஒரு 15 வயது சிறுமி வந்தார் .அவரோடு 19 வயது வாலிபரும் வந்தார் .அப்போது அவர்கள் டாக்டரிடம் அந்த சிறுமி ஐந்து மாத கர்ப்பமாக இருப்பதாகவும் அவரின் கருவை கலைக்க வேண்டுமென கேட்டார்கள் .இதற்கு சம்மதித்த அந்த டாக்டர் ஷா அந்த சிறுமியின் கருவை கலைத்தார் .அதற்காக அவர் கட்டணமாக 15000 ரூபாய் வசூலித்தார் .பிறகு அந்த டாக்டர் ஷா அந்த கருவினை காரில் சென்று ஒரு குப்பை தொட்டியில் வீசிவிட்டு சென்றுள்ளார் .
அதை அங்கிருந்து யாரோ ஒரு நபர் போலீசுக்கு தகவல் சொல்லவே ,இதை விசாரித்த போலீசார் முதலில்

கருக்கலைப்பு செய்துகொண்ட மைனர் சிறுமியை கண்டுபிடித்தனர். பிறகு அவர் அளித்த தகவல்களின் அடிப்படையில், சிறுமியை கெடுத்த சுனில் சர்காராவை (19) என்ற நபரை கைது செய்தனர். பிறகு சர்காரா மீது கற்பழிப்பு மற்றும் போக்ஸோ சட்டத்தின் பிற தொடர்புடைய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர் .
பின்னர், போலீஸ் அதிகாரிகள் தொழில்நுட்ப ஆதாரங்களை சேகரித்து, சனிக்கிழமை கருக்கலைப்பு செய்த அந்த மருத்துவரையும் கைது செய்தனர்