×

“பிரசவத்துக்கு வந்த பொண்ணுகிட்ட இப்படியா கேப்பிங்க..” -சிக்கிய அரசு மருத்துவமனை டாக்டர்

ஒரு அரசு மருத்துவமனையின் டாக்டர், பிரசவத்துக்கு 10000 ரூபாய் லஞ்சம் கேட்டதால் கைது செய்யப்பட்டார் . மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள குர்த்வாடி கிராமத்தில் வசிக்கும் ஒரு பெண் நிறைமாத கார்ப்பிணியாக இருந்தார் .அதனால் அந்த பெண்ணுக்கு கடந்த வாரம் பிரசவ வலி ஏற்பட்டது . அதனால் அவர் குர்துவாடோ கிராமப்புற மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் டாக்டர் சந்தோஷ் பிபிஷன் அத்கேல், அந்த பெண்ணின் கணவரிடம் இந்த
 

ஒரு அரசு மருத்துவமனையின் டாக்டர், பிரசவத்துக்கு 10000 ரூபாய் லஞ்சம் கேட்டதால் கைது செய்யப்பட்டார் .

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள குர்த்வாடி கிராமத்தில் வசிக்கும் ஒரு பெண் நிறைமாத கார்ப்பிணியாக இருந்தார் .அதனால் அந்த பெண்ணுக்கு கடந்த வாரம் பிரசவ வலி ஏற்பட்டது .

அதனால் அவர் குர்துவாடோ கிராமப்புற மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் டாக்டர் சந்தோஷ் பிபிஷன் அத்கேல், அந்த பெண்ணின்  கணவரிடம் இந்த பிரசவத்துக்கு  ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும், இந்த அறுவை சிகிச்சையை  தொடங்க ரூ .10,000 லஞ்சம் கோரியுள்ளார் . அதை கேட்டு அந்த பெண்ணின் கணவர் அதிர்ச்சியடைந்தார் .பின்னர் அவர் தன்னிடம் 9000 ரூபாய்தான் இருப்பதாக கூறி அதை அந்த டாக்டரிடம் கொடுத்து பிரசவம் பார்க்க சொன்னார் .

அதன் பின்னர் லஞ்ச பணத்தை வாங்கிய அந்த டாகடர் பிரசவம் பார்க்க ஒப்புக்கொண்டார் .இதற்கிடையே அந்த பெண்னின் உறவினர்கள் டாக்டர்  லஞ்சம் கேட்கும் விஷயத்தை லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார்கள் .அதனால் அந்த ஹாஸ்ப்பிட்டலில் ஒளிந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள்  அந்த டாக்டர் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடித்தார்கள் .அதன் பின்னர் அந்த டாக்டரை போலீசில் ஒப்படைத்தார்கள் .போலீசார் அந்த டாக்டர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் .