×

பேஸ்புக்கில் காதல் ; ஏமாற்றிய காவலர் : பழிவாங்க தீக்குளித்த சிறுமி

காதலித்து விட்டு காவலர் ஒருவர் ஏமாற்றியதால் சிறுமி தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வியாசர்பாடி ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் ஜான் கென்னடி. இவருக்கு எலிசபெத் என்ற மனைவியும், கிளின்டன் என்ற மகனும் , கிரேசி(17) என்ற மகளும் உள்ளனர். கிரேசி கேட்டரிங் இன்ஸ்டிட்யூட்டில் படித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேஸ்புக்கில் கிரேசிக்கு அரக்கோணத்தை சேர்ந்த மகேஷ் என்பவரின் நட்பு கிடைத்தது. இவர் புழல் சிறையில் காவல் கண்காணிப்பாளராக இருந்து வந்துள்ளார். நட்பு
 

காதலித்து விட்டு காவலர் ஒருவர் ஏமாற்றியதால் சிறுமி தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வியாசர்பாடி ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் ஜான் கென்னடி. இவருக்கு எலிசபெத் என்ற மனைவியும், கிளின்டன் என்ற மகனும் , கிரேசி(17) என்ற மகளும் உள்ளனர். கிரேசி கேட்டரிங் இன்ஸ்டிட்யூட்டில் படித்து வந்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேஸ்புக்கில் கிரேசிக்கு அரக்கோணத்தை சேர்ந்த மகேஷ் என்பவரின் நட்பு கிடைத்தது. இவர் புழல் சிறையில் காவல் கண்காணிப்பாளராக இருந்து வந்துள்ளார். நட்பு என்ற ரீதியில் ஆரம்பமான இவர்களின் பழக்கம் ஒரு கட்டத்தில் காதலாக மாறியது. இதனால் கிரேசி மகேஷுடன் பல்வேறு இடங்களுக்கு சுற்றி திரிந்துள்ளார். அத்துடன் மகேஷ் அவருடன் பாலியல் ரீதியான உறவையும் வைத்துள்ளார். இதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக கிரேசியிடம் பேசுவதை நிறுத்தி உள்ளார்.
இது குறித்து கேட்ட போதிலும் மகேஷ் சரியான பதில் எதுவும் கூறவில்லை என்று தெரிகிறது. கிரேசியின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வர, அவர்கள் அவரை கண்டித்ததுடன் அவரது செல்போனையும் வாங்கி வைத்துக் கொண்டனர்.

இதனால் மனமுடைந்த கிரேசி, இரண்டு தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து கொண்டார். கிரேசியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 80 சதவீத காயங்களுடன் உயிருக்கு போராடி வந்த அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், தனது மரணத்திற்கு காரணம் பாகிஸ்தான் மகேஷ் தான். அவர் பாலியல் ரீதியாக பழகிவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டார் என்றும் அவரை பழிவாங்கவே தீக்குளித்தேன் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து எம்கேபி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.