×

"அடுத்த வீட்டுக்காரி புருஷன் அடிக்கடி .."பதினாலு வயசு பள்ளி மாணவிக்கு  நேர்ந்த கொடுமை 

 

பக்கத்து வீட்டுக்காரர் பாலியல் தொல்லை கொடுத்ததால் 9ம் வகுப்பு மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள கனியூரை அடுத்துள்ள கிராமப் பகுதியைச் சேர்ந்த 14 வயது மாணவி,ஒரு அரசு உயர்நிலை பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். அந்த மாணவியின் பக்கத்து வீட்டில் 37 வயதான கல்யாணமான நபர் ஒருவர் அந்த பெண்ணுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்தார் .இதனால் அந்த பெண் வீட்டில் நிம்மதியில்லாமல் இருந்தார் .மேலும் இந்த விஷயத்தினை வீட்டில் சொல்லவும் பயந்தார் .
 இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் பள்ளியில் உணவு இடைவேளையின்போது  சாப்பாட்டில் சாணி பவுடரை கலந்து சாப்பிட்டு அவர் தற்கொலைக்கு முயன்றார் . பின்னர் மயங்கி கிடந்த அந்த மாணவியை  அந்த பள்ளி  ஆசிரியர்கள் மீட்டு  அந்த ஊரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு , அப்பெண்னின் தற்கொலைக்கு காரணமான அந்த பக்கத்து வீட்டு திருமணமான இளைஞரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.