×

சிறுமி பாலியல் வன்கொடுமை : தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கைது!

சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை வண்ணாரப்பேட்டை சேர்ந்த 13 வயது மகளை, அவரது பெரியம்மா மகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக சிறுமியின் தாய் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். புகாரின் அடிப்படையில் வண்ணாரப்பேட்டை மகளிர் போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமியின் பெரியம்மா மகள் ஷாகிதா பானு தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி தனது 13 வயது தங்கையை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு
 

சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை வண்ணாரப்பேட்டை சேர்ந்த 13 வயது மகளை, அவரது பெரியம்மா மகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக சிறுமியின் தாய் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். புகாரின் அடிப்படையில் வண்ணாரப்பேட்டை மகளிர் போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமியின் பெரியம்மா மகள் ஷாகிதா பானு தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி தனது 13 வயது தங்கையை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு சிறுமியை அழைத்து சென்றுள்ளார். இவர் தனது கணவர் மதன்குமாருடன் சேர்ந்து சிறுமியை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளது தெரியவந்தது.

இந்த விவகாரத்தில் ஷாகிதா பானு, மதன்குமார் ,சந்தியா, செல்வி, மகேஸ்வரி, வனிதா ,கார்த்தி ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் காசிமேடு பகுதியை சேர்ந்த பாஜக வடசென்னை கிழக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், எண்ணூர் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் புகழேந்தியையும் போலீசார் கைது செய்தனர். இவர்களுடன் சென்ட்ரல் ரயில் நிலைய ஊழியர் காமேஸ்வரன் என்பவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் .

இந்நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டை 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை வழக்கில் ஏற்கனவே 15 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வினோபாஜி கைது செய்யப்பட்டுள்ளார் . அத்துடன் இந்த வழக்கில் மேலும் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர்.