×

"பெண்ணின் பிறப்புறுப்பை பயங்கரமாக  தாக்கி ...: -பரிசோதித்த டாக்டர்களையே பதை பதைக்க வைத்த பலாத்காரம்   

 


16 வயது பெண்ணை கடத்தி சென்று கூட்டு பலாத்காரம் செய்து கூர்மையான ஆயுதங்களால் தாக்கிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர் .


ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் 16 வயது பெண் ஒருவர் தன்னுடைய பெற்றோருடனுடனும் ,சகோதர சகோதரிகளுடனும்  வசித்து வந்தார் .இந்நிலையில் அந்த பெண் கடந்த செவ்வாய்க்கிழமை கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். அந்த குற்றவாளிகள் அந்த பெண்ணை பலாத்காரம் செய்து விட்டு  அவரது அந்தரங்க பகுதிகளில் கூர்மையான பொருட்களைச் செருகி, அங்குள்ள  மேம்பாலத்தில் இருந்து தூக்கி எறிந்துவிட்டு சென்றுவிட்டனர் 
அதன் பிறகு அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் ,போலீசார் அந்த பெண்ணை மீட்டு ,அவரை  அல்வாரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர் .அங்கு மருத்துவர்கள் அந்த பெண்ணின் உடலிலிருந்து வெளியேறும் இரத்தத்தை நிறுத்த முயன்று தோல்வியடைந்தனர்.
பின்னர் அவர் புதன்கிழமை ஜெய்ப்பூரில் உள்ள ஜேகே லோன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சுமார் இரண்டரை மணி நேரம் ஆபரேஷன் செய்த பிறகு, அந்த பெண்ணின்  நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.போலீசார் இது பற்றி வழக்கு பதிந்து அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆராய்ந்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர் .
இந்நிலையில் ராஜஸ்தானின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மம்தா பூபேஷ்  சிறுமியின் குடும்பத்திற்கு 6 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கினார்