×

"டாய்லட் போக விடாம இப்படி டார்ச்சர் செய்யுறீங்களே" -இரவில் வெளியே வந்த பெண்ணுக்கு இருவரால் நேர்ந்த கொடூரம் 

 


டாய்லெட் போக வந்த பெண்ணை இருவர் பலாத்காரம் செய்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டார் 


உத்தரப்பிரதேச மாநிலம்  ஃபதேபூரில் ஒரு மைனர் பெண்ணொருவர் தன்னுடைய  பெற்றோருடன் வசித்து வந்தார் .அந்த பெண்ணின் வீட்டில் டாய்லெட் வசதி இல்லாததால் அந்த பகுதி மக்கள் அங்குள்ள திறந்த வெளியில் இயற்கை  உபாதை கழிப்பது வழக்கம் ,இதை அந்த பகுதியை சேர்ந்த இரு வாலிபர்கள் நோட்டமிட்டு வந்தனர் .
இந்நிலையில்அந்த மைனர் பெண் சில நாள் முன்பு டாய்லெட் போக அந்த திறந்த வெளிக்கு வந்த போது அங்கு ஏற்கனவே ஒளிந்து கொண்டிருந்த இரு நபர்கள் அந்த பெண்ணை பிடித்து பலாத்காரம் செய்தனர் .பின்னர் அந்த சிறுமி அங்கேயே மயங்கி கிடந்தார் .பின்னர் அந்த சிறுமியின் உறவினர்கள் அப்பெண்ணை தேடி சென்ற போது அவர் தனக்கு இருவரால் நேர்ந்த கொடுமையை கூறினார் .பின்னர் அவர்கள் பொலிசில் புகாரளித்தனர் .போலீசார் விசாரித்து வந்த நிலையில் அந்த பெண் அவசரப்பட்டு எலி மருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார் .அவரை ஹாஸ்பிட்டலில் சிகிச்சைக்கு சேர்த்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை .பின்னர் போலீசார் அந்த குற்றவாளிகளில் ஒருவரை மட்டும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்  .குடும்பத்தினரின் புகாரின் அடிப்படையில், மற்ற குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.