×

‘என் மரணத்திற்கு அவங்க தான் காரணம்’… கடிதம் எழுதி வைத்துவிட்டு இளம்பெண் தற்கொலை!

திருமுல்லைவாயல் அருகே புதுமணப் பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர், மாமியார் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை கேகே நகரில் வசித்து வந்த தம்பதி பாலமுருகன்(29) – ஜோதி ஸ்ரீ(19). இவர்களுக்கு திருமணமான ஒரு சில மாதங்களிலேயே பாலமுருகனின் தாயார் அம்சா ஜோதியை கொடுமைப்படுத்த ஆரம்பித்துள்ளார். கடன் வாங்கி வீட்டை வாங்கி இருப்பதால் அம்மா வீட்டில் இருந்து பணம் கொண்டுவர வேண்டும் என கூறி அவரை துன்புறுத்தியுள்ளார். ஒரு கட்டத்தில் கணவன் வீட்டைவிட்டு வெளியேறி
 

திருமுல்லைவாயல் அருகே புதுமணப் பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர், மாமியார் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை கேகே நகரில் வசித்து வந்த தம்பதி பாலமுருகன்(29) – ஜோதி ஸ்ரீ(19). இவர்களுக்கு திருமணமான ஒரு சில மாதங்களிலேயே பாலமுருகனின் தாயார் அம்சா ஜோதியை கொடுமைப்படுத்த ஆரம்பித்துள்ளார். கடன் வாங்கி வீட்டை வாங்கி இருப்பதால் அம்மா வீட்டில் இருந்து பணம் கொண்டுவர வேண்டும் என கூறி அவரை துன்புறுத்தியுள்ளார்.

ஒரு கட்டத்தில் கணவன் வீட்டைவிட்டு வெளியேறி பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார் ஜோதி. பிறகு கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி மீண்டும் கணவர் வீட்டுக்கு வந்த நிலையில் மாமியார் அவரை உள்ளே அனுமதிக்கவில்லையாம். ஜோதி இருந்து அறையில் மின் ஒயரையும் துண்டித்துள்ளார். மனமுடைந்த ஜோதி செல்போனில் வீடியோ ஒன்றே பதிவு செய்துவிட்டு, கடிதம் ஒன்று எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அந்த கடிதத்தில் எனது தற்கொலைக்கு கணவன் குடும்பம் தான் காரணம் என்றும் அவர்களை சும்மா விடாதீர்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் ஜோதியை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவன், மாமியார் உட்பட 3 பேரை திருமுல்லைவாயல் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் திருவள்ளூர் ஆர்டிஓ நடத்திய பிறகே கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.