×

“என்னை கட்டிக்கோ இல்லேன்னா அடிக்கடி வந்து ஒட்டிக்கோ” -டாக்டரை டார்ச்சர் செய்த பெண் நோயாளிக்கு நேர்ந்த நிலை

தன்னோடு டேட்டிங் செய்த டாக்டரை ஒரு பெண் நோயாளி டார்ச்சர் செய்து, கல்யாணம் செய்துகொள்ள வற்புறுத்தியதால் , அவரை கொலை செய்த டாக்டரை போலீசார் கைது செய்தார்கள் . உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் இஸ்மாயில் என்ற டாக்டர் ஒரு க்ளினிக் நடத்தி வருகிறார். 33 வயதான அவர் ஏற்கனவே திருமணமானவர்.அவரின் க்ளினிக்கிற்கு கல்யாணமாகி நான்கு குழந்தை களுக்கு தாயான ஒரு பெண் நோயாளி அடிக்கடி சிகிச்சைக்கு வருவார்.அப்போது அந்த பெண்ணின் மீது டாக்டர் இஸ்மாயிலுக்கு ஆசை வந்தது
 


தன்னோடு டேட்டிங் செய்த டாக்டரை ஒரு பெண் நோயாளி டார்ச்சர் செய்து, கல்யாணம் செய்துகொள்ள வற்புறுத்தியதால் , அவரை கொலை செய்த டாக்டரை போலீசார் கைது செய்தார்கள் .

உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் இஸ்மாயில் என்ற டாக்டர் ஒரு க்ளினிக் நடத்தி வருகிறார். 33 வயதான அவர் ஏற்கனவே திருமணமானவர்.அவரின் க்ளினிக்கிற்கு கல்யாணமாகி நான்கு குழந்தை களுக்கு தாயான ஒரு பெண் நோயாளி அடிக்கடி சிகிச்சைக்கு வருவார்.அப்போது அந்த பெண்ணின் மீது டாக்டர் இஸ்மாயிலுக்கு ஆசை வந்தது .இதனால் இருவரும் ஒன்றாக டேட்டிங் செய்து ஊர் சுற்றி வந்தார்கள் .
இந்நிலையில் அந்த டாக்டர் இஸ்மாயிலை அந்த பெண்ணுக்கு திருமணம் செய்து கொள்ளும் ஆசை வந்தது .இதனால் அவர் தன்னுடைய திருமண ஆசையை அவரிடம் கூறினார் .ஆனால் அதற்கு அந்த டாக்டர் மறுத்துள்ளார் .இதை கேட்டு அந்த பெண் மீண்டும் மீண்டும் அவரை கல்யாணம் செய்ய வற்புறுத்தியுள்ளார்
இதனால் அந்த டாக்டர் அந்த பெண்ணை கொலை செய்ய திட்டமிட்டார்.இதன் படி செப்டம்பர் மாதம் 7ம் தேதி அந்த பெண்ணை சண்டிகரில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்து விட்டு அவரை கொலை செய்துள்ளார் .பிறகு அவரின் பிணத்தை அங்குள்ள ஒரு கால்வாயில் வீசியுள்ளார் .போலீசாருக்கு ஒரு பெண்னின் பிணம் கிடப்பதை கண்டு பொது மக்கள் கொடுத்த தகவலின் பேரில் விசாணை நடத்தினார்கள் .அப்போது அந்த டாக்டரின் கள்ள உறவு விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது .இதனால் அந்த டாக்டர் இஸ்மாயிலை விசாரித்தபோது அவர் கொலை செய்த விஷயத்தை ஒப்புக்கொண்டார் .மேற்கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் .