×

"பதினாலு வயசு சிறுவனோடு உறவு வைத்து ,படம் பிடித்து .."ஒரு அத்தையின் கேவலமான வித்தை. 

 

14 வயது சிறுவனுடன் பாலியல் ரீதியில் உறவு வைத்து, அதை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த அவரின் உறவுப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.


தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஒரு 14 வயதான பணக்கார வீட்டு சிறுவன் ஒன்பதாம் வகுப்பில் படித்து வருகிறார் .அந்த சிறுவனுக்கு கர்நாடகா மாநிலம் பெங்களூரில் ஒரு அத்தை இருக்கிறார் . அந்த அத்தை ஒன்பதாம் வகுப்பு படிக்கும் தன் 14 வயதான  மருமகனை சந்திக்க, அடிக்கடி வருவது வழக்கம். அப்போது அந்த பெண் அந்த சிறுவனை மயக்கி ,பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி, அவரோடு  பாலியல் ரீதியாக உறவு வைத்து உள்ளார்.
அப்போது அந்த சிறுவனோடு உறவு கொள்ளும் காட்சியை செல்போனில் ரகசியமாக படம் பிடித்துள்ளார் .பின்னர் அந்த படத்தை அந்த சிறுவனிடம் காண்பித்து அதை வைத்து மிரட்டி அடிக்கடி பணம் நகை கேட்டுள்ளார் .இதனால் பயந்து போன அந்த சிறுவன் தன் வீட்டிலிருந்து 6 லட்சம் மதிப்புள்ள நகை பணத்தை ரகசியமாக எடுத்து வந்து அந்த பெண்ணிடம் கொடுத்துள்ளார் .பின்னர் அந்த சிறுவனின் பெற்றோர் வீட்டில் நகைகள் காணாமல் போனதை கண்டு அதிற்சியுற்று அந்த சிறுவனை விசாரித்த போது ,அந்த அத்தையின் லீலைகள் வெளியானது .பின்னர் அவர் மீது போலீசில் புகாரளிக்கப்பட்டு ,அவரை போலிஸ் கைது செய்தது.