“பணத்தை கொடு ,இல்லேன்னா உன் மனைவியை கொடு” -அண்ணியோடு உண்டான கள்ளத்தொடர்பால் அண்ணனை கொன்ற பாசக்கார தம்பி …
மும்பை சிவாஜி நகர் பகுதியில் தனது கணவர் அஹதுல்லா கானோடு ஒரு பெண் வாழ்ந்து வந்துள்ளார்.அந்த பெண்ணுக்கு அவரின் சகோதரர் நவுசாத் கான் என்பவரோடு கள்ள தொடர்பு இருந்துள்ளது .இந்நிலையில் தனது சகோதரனிடம் அஹ்மதுல்லா கான் பணம் கடனாக வாங்கியுள்ளார் ,இதனால் கடனை அவர் திருப்பி செலுத்தாமல் இருந்துள்ளார் .இந்நிலையில் தனது மனைவியோடு தன்னுடைய சகோதரன் பழகி வரும் விஷயம் அவருக்கு தெரிய வந்துள்ளது ,இதனால் கடுப்பான அஹமதுல்லா ,நவுஷாத்தை கண்டித்துள்ளார் .
இதனால் கோபமுற்ற நவுஷாத் தன்னுடைய சகோதரனை ஒரு தனிமையான இடத்திற்கு கடத்தி சென்று ,அங்கு சில நபர்களோடு சேர்ந்து கொண்டு அவரை கொலை செய்துள்ளார் .
பிறகு இது கொலை என்று தெரியாமல் மறைக்க ஒரு லாரியினை கொண்டு அவர் மேல் ஏற்றி அவரின் உருவத்தினை சிதைத்து விட்டு பிணத்தை அங்கேயே போட்டுவிட்டு சென்றுள்ளார் .
இந்நிலையில் அஹமதுல்லாவின் மனைவி ஜூன் 18ம் தேதி தன்னுடைய கணவரை காணவில்லை என்று போலீசில் புகாரளித்தார் .புகாரை பெற்றுக்கொண்ட சிவாஜிநகர் போலீஸ் இந்த வழக்கில் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவரின் சகோதரர் நவுஷாத்தை கடந்த சனியன்று பிடித்து விசாரித்ததில் அவர் ,அஹமதுல்லாவை கொலை செய்த விஷயத்தினை ஒப்புக்கொண்டார் .பிறகு போலீசார் அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர் .