×

‘கடனை கேட்ட தந்தைக்கு மகனின் உடலை அனுப்பிய கடன்காரர்கள்’ -பணத்தகராறில் பதினைந்து வயது சிறுவன் பலி..

ஒரு பணத்தகராறில் கொடுத்த பணத்தை கேட்ட ஒரு தொழிலதிபரின் மகனை ,கற்களால் தாக்கி கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர் . தெற்கு டெல்லியின் ஜம்ருத்பூர் பகுதியில் கதிர் என்ற 55 வயது நபரும் ,சதீஷ் என்ற 45 வயது நபரும் ஒரு தொழிலதிபரிடம் கடன் வாங்கியிருந்தனர் ,இதனால் அந்த தொழிலதிபர் அவர்களிடம் பணத்தை கேட்டு அடிக்கடி தொல்லை படுத்தியுள்ளார் .மேலும் சில கணக்கு வழக்கில் குறைபாடு இருந்ததால் அவர்களுக்குள் அடிக்கடி இந்த பண விஷயத்தில்
 

ஒரு பணத்தகராறில் கொடுத்த பணத்தை கேட்ட ஒரு தொழிலதிபரின் மகனை ,கற்களால் தாக்கி கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர் .


தெற்கு டெல்லியின் ஜம்ருத்பூர் பகுதியில் கதிர் என்ற 55 வயது நபரும் ,சதீஷ் என்ற 45 வயது நபரும் ஒரு தொழிலதிபரிடம் கடன் வாங்கியிருந்தனர் ,இதனால் அந்த தொழிலதிபர் அவர்களிடம் பணத்தை கேட்டு அடிக்கடி தொல்லை படுத்தியுள்ளார் .மேலும் சில கணக்கு வழக்கில் குறைபாடு இருந்ததால் அவர்களுக்குள் அடிக்கடி இந்த பண விஷயத்தில் தகராறு இருந்துள்ளது .இதனால் அவர்களுக்குள் கடும் பகை இருந்துள்ளது .
இந்நிலையில் கடந்த திங்கள் கிழமையன்று சதீஷும் ,கதிரும் சேர்ந்த அந்த தொழிலதிபரின் 15 வயது மகனை கடத்தி சென்றனர் .பிறகு அந்த சிறுவனை ஒரு செங்கல்லை கொண்டு தாக்கி விட்டு கடும் காயத்துடன் ரத்தவெள்ளத்தில் விட்டு விட்டு ஓடி விட்டனர் .


மறுநாள் அந்த வழியே வந்த சிலர், ஒரு சிறுவன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு போலீசுக்கு தகவல் கூறினார்கள் .போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தியதில் அந்த சிறுவன் அந்த பகுதியை சேர்ந்த ஒரு தொழிலதிபரின் மகன் என கண்டறிந்து அவரை மருத்வமனைக்கு கொண்டு சென்ற போது அங்கே சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார் .
போலீசார் இந்த கொலை வழக்கை பதிவு செய்து ,சிறுவனை கொன்ற சதீஷ் மற்றும் கதிர் ஆகியோரை கைது செய்தனர் .