×

`நீ குடிகாரன், உனக்கு பொண்ணு கிடைக்கமாட்டாள்!’- தந்தையை கொடூரமாக கொன்ற ஆண்டிமடம் வாலிபர்

திருமணம் செய்து வைக்காத தந்தையை மண்வெட்டியால் மகன் வெட்டி படுகொலை செய்துள்ளார். ஆண்டிமடம் அருகே இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள கொங்குநாட்டார்குப்பத்தைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி. விவசாயியான இவரது மகன் கலியமூர்த்திக்கு திருமணம் ஆகாமல் இருந்தது. இந்தநிலையில், தனது நண்பர்களுக்கு திருமணம் நடந்து அவர்கள் ஜாலியாக இருக்கிறார்கள். எனக்கு ஏன் இன்னும் திருமணம் நடத்தி வைக்கவில்லை என்று தந்தையிடம் கூறி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் திருமணம் செய்து வைப்பது
 

திருமணம் செய்து வைக்காத தந்தையை மண்வெட்டியால் மகன் வெட்டி படுகொலை செய்துள்ளார். ஆண்டிமடம் அருகே இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள கொங்குநாட்டார்குப்பத்தைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி. விவசாயியான இவரது மகன் கலியமூர்த்திக்கு திருமணம் ஆகாமல் இருந்தது. இந்தநிலையில், தனது நண்பர்களுக்கு திருமணம் நடந்து அவர்கள் ஜாலியாக இருக்கிறார்கள். எனக்கு ஏன் இன்னும் திருமணம் நடத்தி வைக்கவில்லை என்று தந்தையிடம் கூறி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் திருமணம் செய்து வைப்பது தொடர்பாக தந்தையிடம் மீண்டும் தகராறு செய்துள்ளார் கலியமூர்த்தி. அப்போது, குடிகாரன் உனக்கு யார் பொண்ணு தருவாய் என்று தந்தை கூறியுள்ளார். இதனால் கடும் ஆத்திரமடைந்த கலியமூர்த்தி அருகில் கிடந்த மண்வெட்டியை எடுத்து சக்கரவர்த்தியைச் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சக்கரவர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மகன் கலியமூர்த்தி அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் ஆண்டிமடம் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், சக்கரவர்த்தியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கலியமூர்த்தியை தேடி வருகின்றனர்.

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், “கலியமூர்த்திக்கு வயதாகி சென்றுள்ளது. அவரது நண்பர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. அப்போது, ஏன் இன்னும் நீ திருமணம் செய்து கொள்ளவில்லை என்று நண்பர்கள் கேட்டுள்ளனர். இதனால் கலியமூர்த்திக்கு வேதனை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தனது தந்தையிடம் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி கூறியுள்ளார். குடிகாரனான மகனுக்கு எப்படி பெண் பார்த்து திருமணம் வைப்பது என்று தட்டிக்கழித்து வந்துள்ளார் சக்கரவர்த்தி. இது தொடர்பாக தந்தை- மகனுக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னை அதிகரிக்கவே தந்தையை கலியமூர்த்தி கொலை செய்துள்ளார். தலைமறைவாக இருக்கும் அவரை கைது செய்த பின்னரே முழு விவரம் தெரியவரும்” என்று முடித்துக் கொண்டனர்.