×

"காதலனோடு வீட்டுக்குள் புகுந்த பெண்" -உல்லாசமாக இருக்க என்ன பிளான் போட்டாங்க பாருங்க.. .. 

 


காதலனோடு ஜாலியாயிருக்க தன் வீட்டிலிருந்து பல லட்சம் நகை பணத்தை கொள்ளையடித்த காதலர்களை போலீஸ் கைது செய்தது 


கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பகலகுண்டேயில் ஒரு 20 வயதான பெண் அதே பகுதியில் வசிக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு வாலிபரை காதலித்து வந்தார் .அந்த வாலிபருக்கு வருமானம் குறைவாக இருந்ததால்  அவர்கள் ஜாலியாக இருக்க பணம் போதவில்லை .அதனால் அந்த காதலர்கள் இருவரும் ஒரு திட்டம் போட்டனர் .அதன் படி அந்த பெண்ணின் தந்தை வீட்டில் வைத்திருக்கும் நகைகளை கொள்ளையடிக்க திட்டம் போட்டனர் .
அதன்படி கடந்த நவம்பர் 29 அன்று,அந்த பெண்ணின் தந்தை அவரின் வீட்டில் பணம் நகைகளை வைத்து பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டார் .இதை அவரின் மகள் கவனித்து ,தன் காதலனுக்கு தகவல் சொன்னார் .இதனால் அந்த காதலன் வீட்டிற்கு வந்ததும்,  இருவரும் சேர்ந்து அந்த பீரோவில் இருந்து 1.1 லட்சம் பணம்  மற்றும் 130 கிராம் தங்கத்தையும்  திருடி சென்று விட்டனர் .மறுநாள் பணம் நகைகளை காணாத அந்த தந்தை ,தன் வீட்டில் இருந்து நகைகளையும் பணத்தையும் தன் மகளும்  அவரின் காதலனும் எடுத்ததாக சந்தேகப்பட்டார் .பின்னர் அவர் அங்குள்ள போலீசில் புகாரளித்ததும் ,அவர்கள் விசாரணை மேற்கொண்டு அந்த நபரின் மகள் மற்றும் காதலனை கைது  செய்தனர் .மேலும் இருவரிடமிருந்து நகைகளை  மீட்க விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.